ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

7. ஜெபமாலை

தேவசுவாபமகிமை

உபையார்த்தம்

1. பொன்னாட்டவர்கள் வணங்கானே
பொன்னாட்டவர்கள் வணங்கானே
பூமிக்கான வாதவனே
பூமிக்கான வாதவனே
தன்னாட்டியத்தா வீதருளே
தன்னாட்டியத்தா வீதருளே
தாவானவர்க்குச் சாந்தானே
தாவானவர்க்குச் சாந்தானே
உன்னாட்டளவைக் கரியானே
உன்னாட்டளவைக் கரியானே
ஊழிக்கால முதியானே
ஊழிக்கால முதியானே
என்னாட்டியக்கந் தாரானே
என்னாட்டியக்கந் தாரானே
ஏயோவாவே காகாவே
ஏயோவாவே காகாவே

எ-து.வானாட்டார் வணங்கி நின்றவனே
பொன்னாட்டமுடையோர் வணங்காதவனே
உலகுக்கான சூரியனே
அழகு மிகுந்தவா தவத்தோனே
தன்னென்னும் நாட்டியத் தாவீதின் கிருபையே
தனது மனையாட்டியாகிய திருச்சபைக்குப் பிதாவே
இதைக் கொடேன் (இது, தாவீதுக்களித்த கிருபை)
வலியானவர்க்கு வாசனையானவனே
கெட்டுபோனவர்க்குச் சாந்தமானவனே
உன்னிய செயலளவுக்கரிதானவனே:
உன்னாடுகளினாட் சாட்சியானவனே
(கரி = சாட்சி; நாட்சாட்சி = அன்றாடகச் சாட்சி)
முடியாக் காலத்தின் முதியவனே
பகையை இக்காலத்திலுதிக்கப் பண்ணாதவனே
என் கூத்தாகிய சதுர் பிரசங்கத்திற் பிரகாசிக்கும் அழகியமாலையானே
எந்நாளுந்தியக்கந் தராதவனே
ஏயோ விடுதலையே பூங்காவனச் சோலையே
ஏயோவாவே காத்தருளுங் காத்தருளுமே

2. வல்லத்தடமா மாதங்கமே
வல்லத்தடமா மாதங்கமே
மலையாவலையா மாதங்கமே
மலையாவலையா மாதங்கமே
செல்லத்தருவா திருக்கானே
செல்லத்தருவா திருக்கானே
செப்பத்துரையே தானானே
செப்பத்துரையே தானானே
சொல்லத்தத்தந்தா தந்தையரே
சொல்லத்தத்தந்தா தந்தையரே
தொந்தத்தந்தந்தா நந்தலைவா
தொந்தத்தந்தந்தா நந்தலைவா
இல்லத்தனத்தா ரார்வலனே
இல்லத்தனத்தா ரார்வலனே
ஏயோவாவே காகாவே
ஏயோவாவே காகாவே

எ-து. வலிமையும் பெருமையுமுடைத்தான மகாமாதென்ற
சீயோன் குமாரத்தியின் வேதாங்கமே.
வலிய பொல்லாங்காம் ஏவையென்ற மாதின் பாவமே
மலையாத அலையாத மகா தங்கமே
மலை போலாசையான ஐயா பெருமை தங்கிய அழகே
செல்வ விருட்சமே கண்ணானவனே
கிட்டிச்செல்லத் தராதிருக்கானே
செவ்வையான துரையே தானானவனே
செப்பிய பத்துக் கற்பனைக்கேதானவனே
சொற்பொருளின் அழகனே தகப்பனே
புகழ வாக்குத்தத்தங் கொடுத்துள்ள ஐயரே
இருநூல்களின் முடிவனே செல்வக் கடவுளே வாருந்
தொடர்ந்த நன்மரணத்தைக் கட்டளையிடும் நம்நாயகனே
இல்லாத் தன்மையோர்க் கன்பனே
வீட்டில் வருத்தாதவரார் வல்லவனே
ஏயோவாவே

3. அனைத்தும் வணங்கும் அசரீரி
அனைய வுயிர்க்கும் அதிகாரி
ஆர்க்கு மிரங்கும் உபகாரி
அன்பாய்ப் படைத்த ஆசாரி
நினைத்து முடியாத் தயைவாரி
நிதமுங் கிருபை பொழிமாரி
நெஞ்ச மகிழத் தரும்பூரி
நிருவி சாரநி ராதாரி
முனைத்த பகைஞர் விபகாரி
முழுதும் அடியார்க் கனுசாரி
முன்னா தனமா கியமூரி
முந்திரிகைப் பானத் திருவேரி
எனைத் தற்காரி சருவுதாரி
ஏக தாரிஅ காரிகரி
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. சகல வஸ்துகளுந் தொழும் அரூபியே
எல்லா வுயிர்க்குங் கர்த்தனே
யாவர்க்கு மிரங்கும் உபகாரியே
அன்பாய்ச் சிட்டித்த ஆசாரியே
எண்ணி முடியாத் தயைக் கடலே
அன்றாடகங் கிருபை பெய்யு மேகமே
மனங் களிக்கத் தரும் பொன்னே
கவலை யில்லா ஆதாரமற்ற கடவுளே
போரிடுஞ் சத்துராதிகளின் விபகாரியே
முற்றினும் பத்தருக்கனுசாரியே
முந்தின நிலைமையாகிய மகிமையே
முந்திரிகைரசத் திருவாசனையே
என்னைச் சங்கித்தவா சகலஉதாரியே
ஒரேவழியே காரியமற்றதே சாட்சியே
பிதாவாகிய பராபரனே வந்தருளும் வந்தருளுமே
ஏயோவாவே காத்தருளுங் காத்தருளுமே

4. அருமைக் கருணை மனுவேலா
அனாதி பிதாவின் திருப்பாலா
அறிவானந்தக் குருமூலா
ஐயா அடியார்க் கனுகூலா
ஒருமைக் குரிமைக் கதிர்காலா
உண்மை ஞானத் தொருநூலா
ஒன்றாகியகா ரணமாலா
உனதத்துனதத் துயர்மேலா
தருமப் பரமப் புரிசாலா
தாவீதரசன் செங்கோலா
சமஸ்த புண்ணியதே வகுணாலா
சருவ சீவ செயசீலா
இருமைப் பெருமைக் கோலோலா
இயேசுக் கிறிஸ்து இசறேலா
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. அருமையான கிருபையுள்ள மனுவேலே
அனாதியாயிருக்கிற பிதாவின் திருக்குமாரா
அறிவின் மகிழ்ச்சியாயிருக்கிற குருமுதலே
ஐயாவே பத்தர்மேற் கிருபையானவனே
ஒற்றுமையோர்க் குரிமையான ஒளிவின் பாதனே
மெஞ்ஞானத்தினொரே வேதநூலனே
ஒன்றான பிரதான ஆசையே
உன்னதத்துக் குன்னதத்துயர்ந்த மேலவனே
அறத்தின் பரம இராச்சியத்துக்கு வருந்தி அழைக்கிறவனே
தாவீதரசன் செங்கோற்குரியவனே
சகல புண்ணிய தேவ சுவாபத்தோனே
சருவ சீவாற்றுமாக்களின் வெற்றிப்பிரபுவே
இம்மை மறுமை வாழ்வுக் கொலித்தழைக்கிறவனே
இயேசுக் கிறிஸ்தென்கும் இசறாவேலே
பிதாவாகிய பராபரனே

5. ஆக மனத்துக் கடங்கானே
அவத்தத் தவத்தைத் தொடங்கானே
அனைத்தும் படைத்த தாதாவே
அறத்தை யுடைத்த வேதாவே
தேக சொரூபம் அல்லானே
செனன மரணம் இல்லானே
திரிதத் துவத்தில் ஒன்றானே
தேவா லயத்தில் நின்றானே
மாக முழங்க வழங்கோனே
வானோர் புழங்க வெழுங்கோனே
மகிமையுளனே வாகுளனே
மதுரமுளனே வாகுளனே
ஏக முதலேநி ராதரனே
என்கண் ணுதலேப ராபரனே
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. உடலிலு மனத்திலும் அடங்கானே
வீணான தவத்தின் முயலானே
சகலத்தையுஞ் சிஷ்டித்த பிதாவே
தருமமாயிருக்கிற வேதனே
உடலுருவ மல்லானே
பிறப்பிறப் பில்லானே
முத்தத்துவத்தில் ஒன்றானவனே
தேவஸ்தலத்தில் நிற்கின்றவனே
ஆகாயமொலியிட உலாவுவனே
வானோர் நடமாட எழுந்தருளும் இராசாவே
மகிமையுள்ளவனே அழகுள்ளவனே
இன்பமுள்ளவனே நன்மனத்தானே
ஒரே வஸ்துவே நிலையில்லானே
என் விருப்பமே பராபரனே
பிதாவாகிய பராபரனே

6. உனதமான ஒரு தேவே
ஊழியூழிக் குயர் கோவே
ஓதவரிய பெரும் பொருளே
உண்மைக் குருவே திருவருளே
தனது வளமை மிகுத்தோனே
சகல வுலகும் வகுத்தோனே
தானே யிருந்த தொனிச்சயம்பே
தயவா யெழுந்த தனிசுயம்பே
கனமுள் ளவனே வல்லவனே
கனிவுள் ளவனே நல்லவனே
காதற் குரிய பத்தாவே
காட்சிக் கரிய கத்தாவே
எனது வரவே போதரவே
இகலொப் புரவே ஆதரவே
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. உன்னதமான ஏக தேவனே
நித்திய சதாகாலமாய் உயர்ந்த இராசாவே
சொல்லுதற்கரிதான பெரிய வஸ்துவே
உண்மையான குருவே தேவகிருபை
தனது மாட்சிமை மிகுத்தவனே
எல்லா உலகமும் படைத்தோனே
தானாக நின்ற ஓசைக்கடவுளே
கிருபையா யெழுந்தருளிய கலப்பில்லாத சுயம்பே
சங்கையுள்ளவனே வல்லமையுள்ளவனே
ஆசைக்குரிய மணவாளனே
தெரிசனைக் கரிதாகிய கருத்தனே
என் வருமானமே போதரவானதே
பகையை ஒப்புரவாக்குதலே ஆதரவே
பிதாவாகிய பராபரனே

7. ஞானப் பரமா சனத்தானே
நன்மைக் கிருபா சனத்தானே
நாதாந் தத்தா நந்தாதா
நந்தா வந்த நந்தாதா
மோனக் கருணா சமுத்திரமே
முனையு மிருணா சமுத்திரமே
முன்னா னவனே தானவனே
முன்னா னவனே தானவனே
வானத் தரமே அந்தரமே
மனதுத் தரமே அந்தரமே
மன்னா மன்னா மன்னாவே
மன்னா மன்னா மன்னாவே
ஈனக் கரவா கனன்றாதா
என்னக் கரவா கனன்றாதா
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. ஞானமுள்ள பரம கூட்டத்தானே
நன்மையான கிருபை ஆசனத்தானே
ஞான நெறியாளனே நம்பிதாவே
மேய்ப்பனே அழகனே கெடாதவனே
மவுன கிருபைக் கடலே
முனையும் இருளை நாசப்படுத்திய மூன்று நிலையே
முன்னுதானவனே தானாயிருக்கிறவனே
நினையாத அற்புதனே கொடையாளனே
வானத்தின் தலையே தனிமையே
மனதான மறுமொழியே அழகானமலையே
பெருமையான இராசாவே
வானத்தினின் றிறங்கின மன்னாவே
நிலையான ஆமனென்ற நாமத்தைக் கொண்டவனே
நீச வாகனத்தான் பிதாவே
என்னெழுத்தானவனே சினக்காதவனே
பிதாவாகிய பராபரனே

எழுத்து = வேதாட்சரம்; யோவா. 5:36

8. தங்கு ஞானா பத்திரமே
சால மிகுத்த துபத்திரமே
சலத்தான் முனமே பாரதமே
சலத்தா லுனமே பாரதமே
பங்கு தருபா ரம்பரமே
படுமென் றுயர்பா ரம்பரமே
பத்தா வெனக்கார் தாபரமே
பரிவா யெனைப்பார் தாபரமே
பொங்கு பெருக்கத் தண்டலையே
புலமைப் பெருக்கத் தண்டலையே
பொன்னா டுறவோர் முன்னிலையே
புகழா டுறவோர் முன்னிலையே
எங்க ணிறைவா சகநாதா
ஏக நிறைவா சகநாதா
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. தங்கிய ஞான நிருபமே
மிகவு மிகுதியாயிற்று உபத்திரமே
தண்ணீரினால் முன்னுலகைச் சங்கரித்ததே
சஞ்சலத்தினால் நினைவு நூறுகோடாகோடியே
பங்கு தருகின்ற பாரம்பரமானதே
படுகின்ற என் துயரத்தைப் பார் அழகான பராபரமே
நாயகனே எனக்கார் துணையே
அன்பா யெனைப் பாரும் தாரு மோட்சமே
பொங்கிய செல்வ பூங்காவனமே
வித்தாண்மைப் பெருக்கத்தில் அண்டிய கடலே
வானாட்டி லிருக்கின்றவர்களின் முன்னான நிலையே
புகழ் செய்கின்ற உறவோர் முகதாவிலில்லையே
எவ்விடத்து நிறைந்தோனே உலகத்தினாதனே
ஒரே நிறையான வசனத்தினாவைக் கொடும்
பிதாவாகிய பராபரனே

9. மெய்மா மறைக்குப் பகையானே
வீணா மறைக்குப் பகையானே
மேசியாவைத் தருவாயே
மேவுமரணத் தருவாயே
பொய்மாக் களின்கோட் கண்டாயே
பொற்றாள் பெறக்கோட் கண்டாயே
புகழ்பாக் கியசம் பத்தானே
புகல்வாக் கியமும் பத்தானே
செய்மாண் புடையா காவலனே
செயல்மாண் புடையா காவலனே
சீனா பதியே சீர்பதியே
சேனா பதியே சீர்பதியே
எய்மா லிகையே தந்தாளே
இருமா லிகையே தந்தாளே
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. மெய்யான மகா வேதத்துக்குப் பகையாதவனே
வீணான வார்த்தைக்குப் பகையானவனே
மேசியாவைத் தந்தவரே
எழுந்தருளும் மரணம் வருஞ் சமயத்திலே
பொய் மனுடரின் கோளைக் கண்டாயே
அழகிய பாதம் பெறக் குணமான கண்ணைத் தாவேன்
புகழும் பாக்கிய சம்பத்தானவனே
சொல்லிய கற்பனையும் பத்தானவனே
செய்யு மாட்சிமைத் திரட்சியானே இராசாவே
செயலிலழகுடையவனே காத்தருளும் வல்லவனே
சீனா மலையினிடமே கடவுளே
படைத் தலைவனே சீரைப் பதியுமே
சேருஞ்சூரிய ஒழுக்கமே தந்தாளனே
பெருமையான மண மாலையைக் கொடுத்தாளுமே
பிதாவாகிய பராபரனே

10. ஆர்க்கு மிரக்கத் திருக்குருவே
அலையா ரிரக்கத் திருக்குருவே
அகலா நிலையே அகநிலையே
அலையே கலையே அகநிலையே
பார்க்கு மனைத்தும் அடங்காயே
பகைக்கு மனத்தும் அடங்காயே
பாட்டைப் பிரியப் பட்டாயே
பாட்டைப் பிரியப் பட்டாயே
சேர்க்குந் தனமே தெரிசனமே
செய்வந் தனமே தெரிசனமே
திருநல் வேலி அன்பாவே
திருநெல் வேலி யன்பாவே
ஏர்க்கு மணியே திரவியமே
இருகண் மணியே திரவியமே
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. யாவர்க்கும் இரக்கமாயிருக்கிற தெய்வ குருவே
அலையாதவர்கள் இரப்பிரக்கையிற் கண்வடிவே
அகலாத நிலைமையே கடவுளே
கடலே கல்வியே மனதினிலையே
பார்க்கின்ற சகலத்தினும் அடங்கானே
பகைக்கின்ற மனத்தின் மூடத்துவத்தைச் சினந்தருளுமேன்
பாடலைப் பிரியப்பட்டாயே
துன்பத்தைப் பிரிந்திருக்கின்றாயே
சேர்கின்ற பொன்னே காட்சியே
செய்யும் ஆராதனையே தெரிந்த இனமே
தெய்வ நற்காவலே அன்பானவனே
திருநெல்வேலியானுடைய பாடலே
அழகுக் கழகே ஐசுவரியமே
இரண்டு கண்மணியே நிலைத்திருக்கின்ற பெருமையே
பிதாவாகிய பராரபரனே

11. வேத நாய`கன்பாட்டா
மிகப்பா டுறுமோ ரன்பாட்டா
மெஞ் ஞானத்துக் காரணமே
மேலா னத்துக் காரணமே
பாது காவே பரிசனையே
பரம காவே பரிசனையே
பட்டா ரகர்முன் படையாரே
பட்டார் நிகர்முன் படையாரே
நீத முறையே கம்மறையே
நிரைய மறையே கம்மறையே
நிதானப் பரமே திரித்துவமே
நேயப் பரமே திரித்துவமே
ஏத தான சொன்னாரே
இயேசு நாதர் சொன்னாரே
எந்தை பிதாவே வாவாவே
ஏயோவாவே காகாவே

எ-து. வேதநாயகன் பாட்டானே
மிகவும் பாடுபட்ட ஓரன்புடைய ஆட்டை யுடைத்தானவனே
மெஞ் ஞானத்துக்குக் காரணமானதே
மேலானதற்கு வேதமே
பாதுகாத்தருளும் பழக்கமே
பரம பூங்காவனமே பண்புடைய தாயே
தூதாக்களின் முன்படையானவனே
செத்தாருக் கொப்பானவர் முன்பில் அடையாதவனே
நீதியின் இரகசியமே தலையான சொல்லே
நரகத்தை மறையும் ஒரே வேதமே
நிச்சயமான பராபரமே முத்தத்துவமே
அன்பப்பரினழகே வலத்துவமே
காரணமான புகழ்ச்சியின் அன்பே
யேசுநாதர் சொன்னவரே
பிதாவாகிய பராபரனே

ஜெபமாலை 7 வரை செய்யுள் 76

Table of contents

previous page start next page