ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

9. ஜெபமாலை

நிசியா சங்கத்தின் விசுவாசப் பிரமாணம்

விருத்தம்

பரமுல குந்தரு மொருவனை யன்பொடு
பழுதற நம்புகிறேன்
நரருருல கம்பட மரிதரு தந்தையர்
சுதனையும் நம்புகிறேன்
அருபியை நம்புகி றேனதி னைந்தையு
முறுதியி னம்புகிறேன்
றரணமு வந்துன தடிமைகொ ளுந்துதி
தருமசி தம்பரமே

திவிய பிதாச்சுதனாவியுமான
திரியேக வஸ்துவுக்குத் தோத்திரமே

1. பரமண்டலம் பூதலமுங் காணப்
பட்டதுங் காணப்படாதது மான
சரமசரஞ் சராசரங்களென்ற
சகல வஸ்துக்களையுமே படைத்த
பெருமைச் சருவவல்லமை யுடைத்த
பிதாவாகிய பராபரனான
ஒருவனையே விசுவாசிக்கிறேன்-
உறுதியுறுதி உறுதியிற்றானே - திவிய

2. பராபரன் றன்னொரே பேறான
பாலனொரே யாண்டவருமான
பிரானமதேசுக் கிறிஸ்துவையே
பிரியமுடன் விசுவாசிக்கின்றேன்
சராசர சகல உலகங்களுக்கு முன்
றமது பிதாவிடத்திற் சனிக்கப்பட்டோர்
நிராணியனிடத்தி னிராணியனுபாய்
நித்திய பிரகாசத்திற் பிரகாசமுந்தானே - திவிய

நிராணியன் = கடவுள்

3. மெய்யான பரமேசுரனிடத்தில்
மெய்யான தேவனாய்ச் செனிக்கப்பட்டோர்
உய்யாதிராதொரு காலத்தினும்
உண்டாக்கப்பட்டவ ரல்லத்தானே
ஐயாபிதாவின் சுபாவத்தையே
ஒய்யாரமா யுடைத்தானவரே
எய்யாத துண்டுமோ இவரைக்கொண்டே
எல்லா முண்டாக்கப்பட்டதுதானே - திவிய

4. நரராகிய நமக்காகவிவரே
நம்முடைய இரட்சிப்புக்குமாகத்தானே
பரமண்டலத்திருந் திறங்கியுமே
பரிசுத்த ரூபியகற் கன்னியாஸ்திரி
மரியாளிடத்திற் சரீரத்தையே
எடுத்துக்கொண்டு மனுடனானாரே
குருசினிற் பொந்தியுப் பிலாத்துவின்கீழ்
கொடியருக்கா யறைப்பட்டாரே - திவிய

5. பாடுபட்டடக்கப்பட்ட மூன்றாம்நாள்
பரிசுத்த வேதாட்சரத்தின்படியே
ஈடுடனே யுயிர்த்து வானங்களில்
ஏறிப்பிதாவின் வலபாரிசத்திலே
கூடியே வீற்றிருக்கிறார் சீவியர்
வீடித பெயரையும் நடுத்தீர்த்து
வீடுதர மகிமையோடு வருவார்
மீண்டிவரி ராச்சியத்துக் கில்லை முடிவே – திவிய

வீடியர் = மரித்தோர்

6. பரிசுத்த ரூபிச் சருவேசுரனைப்
பத்தியுடனே விசுவாசிக்கின்றேன்
அருள்செய்து சீவனைத்தருகிறவ
ராண்டவருமாக விருக்கின்றாரே
பெருமை பிதாவிடத்துஞ் சுதனிடத்தும்
புறப்படுகின்ற பிரதாபத்தாரே
மருவிப்பிதாவோடு மைந்தனோடும்
வணங்கப்படு மகிமை யுடைத்தோரே - திவிய

7. தீர்க்கதரிசிகளைக் கொண்டோதினார்
திடத்தொரப்போஸ்தலப் பொதுச்சபையும்
பார்க்குளுண்டென்று விசுவாசிக்கின்றேன்
பாவப்பொருத்தற் கொரே ஞானஸ்நானம்
ஆர்க்குமுண்டென் றறிக்கை செய்கிறேனா
ளருகின ருயிர்த்தெழுதற்கும் வரப்போம்
ஏர்க்கையுலகத்தின் சீவனுக்கும்
எதிர்நோக்கி நோக்கியிருக்கின்றேனே - திவிய

நாளருகினர் = மரித்தோர்

2. கா. ஜெபமாலை 9 வரை செய்யுள் 135

Table of contents

previous page start next page