ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

18. ஜெபமாலை

மனவாஞ்சை

திருப் புகழ்ச் சந்தம்

1. திருவருள் பெருகிய விணின் விபுதர்கள்
தெரிசிய ரிருடியர் மறையறி ஞர்கள்
திடவர முளஅரி யவர்பெரி யவர் - சிறியோரும்
ஒருவரு மனநினை வினுமறி வினும்
உணர்விட வரிதென மகிமையி லுயர்
உரைமறை தருபர மகுமர னடி - உரமான
மருவியென் முழுஇரு தயமுரு கிட
மதிதரு ஜெபமணி யினையனு தினம்
மகிழ்வொடு பலதுதி களின்முறை சொல - வளமான
பெருகரு ணைகளிடு வரமிடு வளர்
பிரபையின் மலரடி யிடுனரு மைகள்
பெருமைக ளிடுசெய மிடுநய மிடு - பரதேவே

2. ஆரண மறை யோதிய நேர்புவி
யாவையும் அறு நாளதி லாடிய
ஆதிப னர ரூபம தாகிய - அவதார
காரண மத னாலுயர் வானவர்
காயவிண் ணிலே யாடினர் பாடினர்
கானக முறு மாயர்க டேடினர் - கனிவாகப்
பூரண னுனை யானும நேரொடு
பூசனை செயு மாவ லினான்மிகு
போதக ஜெப மாலைக ளோதிய - புகழாலே
தாரண மருள் பாடிடு நாவருள்
தாபர மருண் மாரண மாகிய
சார்பரு ளுனி னாவியை யருளொரு - பரதேவே

காயம் = ஆகாயம்; தாரணம் = தப்பம்; தாபரம் = ஆதாரம்;
மருள் = மயக்கம்; மரணம் = கொலை

3. பரம நவவெரு சலமதி பதிசுரர்
பணிய நிறைதவி திறைகுல மதினொரு
பருவ கனிமரி உதரம துறுமதி - சயஞான
உரம துரைசதுர் வரமருள் கிருபைமுகில்
உலக முழுதையும் நிலைபெற உயிர்விடும்
உதய மிடுபொறை பெருகிய கணனென - உயர்தேவ
தரும தவசுப சமுகம தொளிரிரு
சரண மலரடி பிரியமுற் றொழுகிய
சகல முகடனை யவலனை வினைமிகு - தமியேனை
அருமை யுடனுன தடிமைகொள் மரணம
தளவு முனைநினை வறிவொடு பணிகுவன்
அதிக சவுரிய சருவவல் லபபர - குருதேவே

4. அனந்த ஞானந் தங்கிய கிருபையும்
அகண்ட நேயம் பொங்கிய பெருமையும்
அடைந்த பேர்தன் பங்கிடு சரணமும் - அதிரூபுஞ்
சினந்த நீதங் கொண்டெழு மகிமைக
டிறங்க ளோடுஞ் சிந்தையி னடியவர்
ஜெபங்க ளோதும் பண்புக ளுணர்வுறு - செயலாலும்
புனைந்த பாவம் பொங்கிய வினைபல
புரிந்த தோடன் கண்டக னயலிடை
புகுந்து நாளுந் தஞ்சம தருளுதல் - புகழாகுங்
கனிந்த நாவுஞ் செஞ்சொலு முரைமரி
கனங்க ளோடுங் கொஞ்சிட வரும்வரை
கடந்த வேதந் தந்தரு ளியபர - குருதேவே

கண்டகன் = துட்டன்

5. துதிபெரு குகடவுள் பரநின்று லோகத்திலே
சுடரென வுமிருள கலவந்து தாபித்துமே
சொருபமொ டுவளர்வ யதிரண்டு மோர்பத்திலே - துடியோடு
சதுசெயர் கள்பரிசெ யர்கள்முன்பு மாதர்க்கமே
தரஅவர் களதிச யமிகுந்து பூரிக்கவே
தருமம றைவிதிமி கஅறிந்து போதித்தவா - சருவேசா
அதிகக னமகிமை நெறிமிஞ்சும் ஞானத்தினால்
அலகைம தமதனி லுறைவஞ்சன் மேன்மெத்தவே
அருள்மெரு கியுனது மறைதந்து பாவித்ததே - அருளாமே
இதுவரை யுமுலகி னினடந்த மோசத்திலே
எனைவில கமிகவ ருள்புரிந்த நேசத்துளே
இனமுமெ னையடிமை கொளுயர்ந்த வானத்துலா – வியதேவே

லூக். 2:46,47

6. அடிமை யெனவேட நிந்தை யுந்த
அவனி மிசைதாழ்மை யின்கண் முந்த
அசடர் சிறைமீள வென்று வந்த - அருளாலே
கடுமை பலவாதை துன்ப மிஞ்சு
கசிவு பிரலாப சஞ்ச லங்கள்
கடுமுடி கள்காயம் ஐந்த டைந்து - கனமான
கொடுமை மரமீது நின்றி றந்து
குருதி வெளமோட வுந்தொ டர்ந்து
கொடிய னெனையாள அன்பு கொண்ட - குருநாதா!
நெடுமை நிழன்மேவு நண்ப னும்பர்
நினைவி னுடனாளும் அஞ்ச லுஞ்செய்
நிகரு வமையாவு மின்றி நின்ற – பரதேவே

(நிழல் = கிருபை)

மத். 27.அதி

7. மலைமுடி செறி கொண்டை முடித்திரு
வரியிட விழி கொண்டு மிரட்டியு
மயலிட வரு மங்கை யருக்கெனின் – மனம்வாடி
உலைமெழு கென நின்று தவிப்பதுன்
உயர்திரு விழி கண்டது தப்பிலை
உலகதி லுறு நிந்தை யிலிப்படி – யுலைவேனோ
அலைகட லது பொங்கி யுரத்தெழ
அதிரொலி பட விண்டு மடித்திட
அடிகளி னுட சங்க மரக்கலம் – அதின்மீது
நீலைதவ றிந டுங்கி யரற்றிட
நிசமென வுமு றங்கி விழித்தெதிர்
நிழலியி னொடு சிந்தைய தட்டிய – பரதேவே

விண்டு = காற்று; அடிகளினுட சங்கம் = முனிவர் கூட்டம்; மரக்கலம் = கப்பல்;
நிழலி = காற்று; சிந்து = கடல்

மத். 8:23-27

8. நறுமலர்க் கமழ் குழலிகள் கலவியை
நணுகிமுற் றினும் உடல்கெட இளமையி
னலமதற் றுறு பிணிகொடு நரகதின் – அடிவீழ்கும்
உறுதிகெட் டவர் களின்முடி வினைமன
துணரவைத் தருள் புரிமுன மிசறல
ரொடுபொரப் படை யுடன்வரும் அசடரை – உரமாக
இறுதிபட் டழி வுகள்பட முறிவுசெய்
தெழுதிவைத் தவர் வழிமர புகளையும்
எழின்முகச் சவு லரசனி னொடுசொலி – எரிவாக
அறுதியிட் டத மிடவரு ளியபடி
அபிமெலக் கரசனை வதை புரியினும்
அவகடச் சவு லையுமொரு வியபர – குருதேவே

பொர = யுத்தஞ் செய்ய

யாத்.17:8-16;1சாமு. 15 அதி.

9. தேசமெங் கெங்கும் அலை வுற்று
நீசனென் றங்கு பல மக்கள்
சீறவுஞ் சிந்தை மதி வைத்த - திடமேகி
மோசமுங் கொண்டு பழி பட்டு
ரோசமும் பங்க மது முற்ற
மூடனென் றென்ற னையும் வைக்க - முறையாமோ
லாசரின் றங்கை மரி பற்று
நேசசொம் பங்கை இத யத்துள்
நாடவும் புந்தி தரு வித்து - நலமான
தாசனென் றுஞ்செய் மன மொத்து
லூசியும் பண்டு புக ழிட்ட
சாமியென் றென்று முடி வற்ற - பரதேவே

லூக்.10:42
லூக். 8:28

10. பவ மதி லுழைத்துத் ததிப்
படி றுக ணடத்தித் துட்டப்
பய லென நடத்தப் பட்டிப் - படிமீதே
அவ ரவர் நகைக்கத் துப்பற்
றவ மதி படைத்துக் கெட்டிட்
டறி வழி பகைக்குட் சிக்கிட் - டலைவேனோ
கவை நகை யெடுத்துக் குட்டிப்
பசு வுறு படுத்திப் பற்றிக்
கன பறை முழக்கித் தட்டிக் - கடமீதே
சவை குடி மிகுத்துக் கொட்டத்
திட நட மடித்துக் கத்தச்
சமை யம தழிக்கப் பற்றுப் - பரதேவே

படி = பூமி

யாத். 32 அதி.

11. மாத ரார்தரும் இச்சை யின்பெரு
மாயை யான்மன மெத்த நொந்ததி
வாதை யாய்மத முற்ற ழிந்திட - மருளாலே
தீதி லேநிலை யுற்ற ருங்கடி
சேய னாயத மத்து றைந்தழல்
சேர வேமுகி வற்ற ழுந்திய - சிறைதீராய்
பாத மானது பற்றி யன்பொடு
பாவை யாடிரு சத்தி யங்கொடு
பாச மாய்மண மிட்டெ ழும்பிய - சுருளாலே
காத லோடுது வட்ட அங்கவள்
காமி யாய்முன்னி ழைத்த நிந்தைகள்
காட தோடஉ ரைத்த சம்பன - பரதேவே

லூக். 7:37,38

12. கணப் பகையுட வலித்திற மொருவினை
கதித் துலகிடும் உபத்திர மொருவினை
கடத் துடல்செய்யும் இடக்குக ளொருவினை - கனமான
பணப் பகையிடு திருக்குக ளொருவினை
படிப் புகடரு மகத்துவ மொருவினை
பகைத் தெதிரிகள் நடத்துவ தொருவினை - பழியாக
மணப் பகையெழ முடிப்ப வரொருவினை
வதைத் திருதயம் உழற்றுவ தொருவினை
மனக் கவலைகள் கணக்கில தொருவினை - மருடீராய்
நிணப் பகைநினி வயர்க்கொரு முனியுட
னிசத் தழிவுகள் வருத்துவ மெனமறை
நிகழ்த் தினும்அருள் நினைத்த ருளியபர - குருதேவே

யோனா 4:10,11

13. பொல்லாத பேய்களை யேதொழுத பாதகர்
கல்லாத மூடர்க ளாய்வளர்க போதிகள்
புல்லோர் கடீவினை யாளர்கள நீதர்கள் - புலையாளர்
எல்லாரும் வாரும்இ தோவெனது நீதியை
அல்லாது சீவனு றாதுகெடு வீர்நலம்
இல்லாத வேழைக ளேயெனவு சாவிய - இணையாளா
உல்லாச மாயுல காசைகளி லேகன
சல்லாப மாய்விளை யாடியட மாய்மனம்
ஒல்காம லேதிரி பாவியெனை யாள்வதுன் - அருளாமே
சொல்வே தநாயகன் ஓதியம னோகர
நல்லாய னேசுசு வாமிகிரு பாகர
தொல்லாதி பாவவி மோசனசரு வேசுர - பரதேவே

மத்.11:28-30

ஜெபமாலை 18 வரை செய்யுள் 217

Table of contents

previous page start next page