ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

29. ஜெபமாலை

பாவவிமோசனம்

குருவிருத்தம்

1. அனந்ததயை நிறைந்தவி ருதயம்பெருக
மகிழ்ந்துலகும் அகண்ட வானும்
வனைந்தொரும னுடன்றனுடன் மடந்தையொரு
தியுஞ்செய்தொரு வனங்கண் டாக்கிக்
கனிந்தரியவ ரங்கள்பல வழங்கியொரு
மரம்படு கனியினால் வந்து
முனைந்தெழுது ரிதங்கள்கெட நினைந்துகுரு
சிறந்தரு ளுமுதன் மைவாழ்வே

வனைதல் = செய்தல்; மடந்தை = பெண்
வனங்கண்டாக்கி = பூங்காவனத்தில் வைத்து

2. கதத்தலகை கொதித்தலறி மிகுத்தபகை
தொடுத்தபடி கறுவிச் சீறி
அதத்தினெவை மனத்தினிடை பவத்தையுற
விளைத்த அவகடத்தி னாலே
மதத்திருவர் பறித்துநுகர் பழத்தினுட
விடத்திருளை மறுத்த மேலாம்
பதத்திலுற விருத்தநெடு மரத்திலுயிர்
விடுத்தவொரு பரம வாழ்வே

கதத்தலகை = உக்கிரமானபிசாசு
பறித்துநுகர் = பறித்துச் சாப்பிட்டு

3. விழுந்தவரை யிகழ்ந்துதழ லெழுந்துநர
கழுந்தவுரை விளம்பா வண்ணஞ்
செழுந்தயவு பொருந்தவருள் சொரிந்துநர
ரடைந்தவினை தீர்த்தீ டேற்றத்
தொழுந்திறமை மிகுந்ததவி தினந்தெரிய
உவந்துமரி சுதனென் றோங்கிப்
பழந்துணியி லணிந்துகுடில் பிறந்துகுரு
சிறந்தவொரு பரம வாழ்வே

4. அடத்தினெடு விடத்தரவு கடித்தவினை
பிடித்துநர ரனைத்துங் கெட்டுத்
திடத்தின்மறை படித்தநெறி நடத்தையற
மடத்தின்வழி சென்ற தாலே
சடத்துவடி வெடுத்தடவி யடுத்துமரி
யிடத்திலுறச் சனித்துக் கூளி
படைத்தலையை யுடைத்துநர கடைத்துயிரை
விடுத்தவொரு பரம வாழ்வே

மடத்தின்வழி = மூடத்தனவழி; சடத்து வடிவு = உடலுருபு;அடவி=காடு

5. இடங்கொளுல கடங்கமிகு மதங்கள்கொடு
பவங்கடரு மிடும்பைக் கண்டே
திடங்கள்கெட நடுங்கவலு பெலன்களொடு
சலங்கள்வரச் சிதைத்து நோவை
யுடன்குமர ரினங்கள்பலு கவுங்கருணை
வழங்கியுயி ரொருங்க வாழ்க
நெடுங்குருசி லடங்கியுயி ரொடுங்கியெமை
இரங்கியரு ணிலைமை வாழ்வே

சிதைத்தல் = அழித்தல்

6. கலக்கமுறு மனுக்கள்கன பெருக்கொடதி
கரிக்கவரு காலந் தன்னிற்
சொலக்கொடிய பவக்கொடுமை மிகுக்குமவர்
நடக்கைகளைத் துயராற் கண்டே
அலைக்கழிய விடிக்குமினல் முழக்கமுறு
மழைக்குளுல கழிக்கச் செய்தே
பலக்கருணை நெவைக்கருளி மலைக்குருசி
லிறக்குமொரு பரம வாழ்வே

7. அலைந்துபிசா சுடன்றுணிவா யகந்தையினான்
மெலிந்தொழியா அனர்த்த மேவி
மலைந்தறிவோ குலைந்தடியே மறந்தரமே
துறந்துயர்போய் மாய்ந்து வீணா
யுலைந்துடலோ டெழுந்தழன்மேல் விழுந்தலறா
துவந்தருள்வா யுனைக்கும் பிட்டேன்
கலைந்தடியார் தொலைந்தழியா தகந்தனிலே
மடிந்தபரா கருணை வாழ்வே

அனர்த்தமேவி = நாசமாய்; அகந்தனிலே = மரத்திலே

8. ஒருத்துவமே திரித்துவமே யும்பரமே
யம்பரமே ஓம் நமாவே
கருத்தொளிவே யறத்துருவே பெருத்ததயா
பரக்கடலே கருணைக் கோவே
குருத்திலையே பிடித்துடையே விரித்திஸரேல்
களித்தொருநாட் குதித்துப் போற்ற
வருத்தமனே மரத்தினிலே மரித்தடியார்க்
குயிர்த்தவொரே மகத்துவ வாழ்வே

உடை = வஸ்திரம்; வருத்தமனே = வருமுத்தமனே

9. அருந்தவமே பரம்பொருளே யறிந்தவரார்
தெரிந்தவரார் ஐயா வுன்னைத்
திருந்தவுமே புகழ்ந்துகொள்வேன் மகிழ்ந்துகொள்வேன்
செபஞ்சொலுவேன் செவ்வே நிற்பேன்
பொருந்தவுமே பதந்தொழுவே னிதங்கவியா
னடம்புரிவேன் பொன்னா டெய்த
வருந்தியுமே வரந்தருவாய் மரந்தனிலே
மடிந்தமகா மகத்துவ வாழ்வே

10. உனைத்தொழுவே னுனைப்புகழ்வே னுனக்குரியேன்
உனைப்பிரியே னுன்னைப் பார்க்க
இனத்தர்களாற் கனத்தவரா குரித்துடனே
நடத்துவரா ரெல்லாம் நீயே
வினைத்துயரான் மனக்குறையான் வருத்தழுறா
திருக்கவுமே வேத நாய
கனைந்தயவாய் நினைத்தரருள்வா யுனக்கடியான்
எனச்சொலுவாய் கருணை வாழ்வே

ஜெபமாலை 29 வரை செய்யுள் 424

Table of contents

previous page start next page