சந்த விருத்தம்
கிறிஸ்து பிறப்பின் முகாந்தரம்
1. சீர்சிறந்தகட லேவளைந்தசெக
மீதிலங்குபொருள் யாவையும்பரம
சேனையுந்தினம தாறிலங்கருளியே
தீமையன்றியிரு பேர்கடங்களையு
மேயலங்கிருத மாய்வனைந்துவளர்
சீவனின்றருவி லேயருந்துமெனவே
நேர்சிறந்தபர னார்மொழிந்தவுரை
மீறியங்கொருப சாசைநம்பிமறை
நேர்மையொன்றுமுண ராதுதங்கள்மனதாய்
நீடுநந்தவன மேசெறிந்தஒரு
தீயபுன்கனியி லேயருந்தியவ
நீதிகொண்டுமத மேறிமிஞ்சிவலுவாய்
ஏர்சிறந்ததவ மேயிழந்தவர்கள்
நால்வரங்களுமெ லாமழிந்திழிவ
தேமிகுந்துபவ மேநிறைந்தபடியால்
ஏகனங்குவன மீதெழுந்துநடு
வேவிளம்பினவ நேரமங்கவர்க
ளேதமங்குபிணை யாளியென்றுசொலியே
பார்சிறந்தவுல கூடுயர்ந்தகலி
லேயமென்றபெரு நாடதங்கணொரு
பாவையங்கண்மரி மாதுபண்டிதனிலே
பாடித்தான்றிரள் வானத்தாஞ்சுகள்
ஆயர்க்காம்புக லோதிப்போம்படி
பாசத்தூர்ந்தெமை நேசித்தாண்டவனே
வனைதல் = செய்தல்; அருந்தல் = புசித்தல்;
நால்வரம் = ஞானம், பரிசுத்தம், பாக்கியம்,சாவாமை;
அங்கண் = அழகியகண்; பண்டி = வயிறு
கிறிஸ்து மனுடவதார உற்பத்தி
2. வாசமிட்டநச ராபுரிக்குள்வள
மேமிகுத்ததவி ராசபுத்திரசுப
மாதவப்புனித சூசையப்பருடனே
வாகுறத்திருவி வாகவொப்பிலுறு
நேமுகப்பெண்மரி மாதிடத்ததிக
வானகச்சுரரி லேயொருத்தன்வரலாய்
நேசமிட்டகனி மார்களுக்குளுய
ராசிபெற்றமக ராசிமிக்கவதி
நேர்மையுற்றொருகு மாரனைப்பெறுவைநீ
நீடிரட்சகவி யேசுகத்தரென
நாமமிட்டருளு வாய்பரப்பிரம
நேயதற்சொருப சேயெனப்படுவரே
தேசமிட்டவிச றேலருக்கரச
னாகவெப்பொழுது மேதிறத்தினோடு
தீமையற்றதவி தாசனத்திலெழுவார்
தேவமுக்கியம தாய்நடத்தியவி
ராசரிக்கமுகி யாதிருக்குநல
சீரெனக்கபிரி யேல்வழுத்தமரியோ
பாசமிட்டஉரி யோனெனக்கிலையி
தாம்விதத்தையறி யேனெனக்கன
பராபரத்தினரு ளானடக்குமெனவே
பரிவுற்றமாதுமுன்பு விஸ்தரித்துத்தான்சொனதாம்படி
பரிசுத்தரூபியென்ற இஸ்பிரீத்துச்சாந்துவிலோங்கிய
பழுதற்றமேனிகொண்ட மெய்க்கிறிஸ்துச்சாந்தகுணேந்திரனே
கபிரியேலு மரியனையும் சம்பாஷித்தல்
3. அழகதிட்டகபி ரியல்சிறப்பினொடு
நசரையிற்பெரிய தவமிகுத்தசுப
அறிவின்மிக்ககனி மரியிடத்தணுகியே
அதிகவுத்தமகி ருபைகள்பெற்றவளுள்
இடமதற்குளொரு செயனடக்குநல
அறிவையர்க்குளுயர் வளமுடைத்தையெனவே
மொழியவப்பொழுது கனிபயத்தினொடு
சுரனுரைத்தசொலை நினைவிலொத்துணர
முகனைவைத்தகபி ரியலதற்குரைசொல்வான்
முதல்விஇப்பொழுது பயமகற்றிவிடு
பரனிடத்ததிக கிருபைபெற்றையினி
முழுதுமற்புதவ திசயகெற்பமுறலாய்
எழிலுதித்தவொரு குமாரனைப்பெறுவை
இவர்பரப்பிரம சுதனெனப்படுவர்
இணைநிகர்த்ததவி தரசிடத்தினெறியோ
டிசறலுக்கரச னெனமகத்துவமொடு
முடிவதற்றனுதி னமுமிருப்பர்திடம்
எனமரிப்பெண்மறு மொழிகொடுத்தவன்முனே
கொழுநனைச்சிறிது மறியவுற்றதிலை
இதுநடப்பதென விதமெனக்குரைசெய்
குலவுமதற்பரம னுடபெலத்திலெனவே
குணமிஞ்சுமாமரிக்கு ரைத்தவிந்தையாலொரு
மகவென்றுபூதலத்து தித்தஎந்தயாபர
குருமந்திரசேகரக்கி றிஸ்துமண்டலாதிபனே
சேகரம் = முடி
யோசேப்பின் சந்தேக நிவிர்த்தி
4. மரிமங்கையுடபண்டி சினைகொண்டநெறிகண்டு
மலைவொன்றி அவளன்பனே
வலுநிந்தைசெயநன்ற திலையென்ற வளையங்கு
மறுபங்கில் விடநெஞ்சிலே
கருதுஞ்சரிதையொன்று நினைவுஞ்செய்திட
ககனந்தனி லிருந்துமே
கதிர்தங்குபிரவைமிஞ்சு சு ரனண்டிமொழிவிண்டுமுன்பு
கழறுந்த விதுமைந்தனே
ஒருவஞ்செய்வதுநன்ற தலநெஞ்சினிடைசங்கை
ஒழியுன்ற னெறிமங்கையே
ஒருசந்ததிபெறும்பின் அவரின்பெயரேசென்றிவ்
வுலகந்தொழ விளம்புவாய்
பரவுங்கிருபைபொங்கி நரர்பங்கமதனின்று
பரமண்டலம் விளங்கவே
பலன்றந்துகாப்பரென்று யோசேப்புக்கோதிய
படிவந்தமீட்பரும்பர் வானாட்டுக்காதிப
பனிரண்டுதீர்க்கர்தங்கள் மாபாக்கியச்சீர்பதியே
சினை = கருப்பம்; கழறல் = சொல்லல்; ஒருவுதல்= நீக்குதல்
கிறிஸ்துவின் செனனம்
5. துங்கநீள்புவிக்குள் எங்குமேகுடிக்கி
சைந்துதான்மதிப்ப றைந்துகீறமிக்க
துங்கனாமகுஸ்து தந்தவாறுதிட்டமே
சொந்தமாகமக்க டங்கணாடெனப்பி
றந்தவூரதற்க டைந்துபோகமுக்கிய
சுந்தரசூசையப்ப ருந்தனேமுகப்பெணா
மங்கையோடுபற்றி முந்துநாசரத்தில்
நின்றுகூடியொக்க வென்றிசேர்த்துபெத்தல்
வந்தபோதுபொற்பி லங்குவேல்கொண்மைக்கணாள்
மஞ்சுலாவுகெற்ப மிஞ்சமீறியச்சம்
அனறியேபிறப்ப தொன்றவேயடுத்த
மந்தைமேய்வனத்தில் அண்டியோர்குடிற்குளே
அங்குதானிருக்கும் அந்தவேளையொப்ப
தந்தமாதியற்ற எந்தைசேயனைத்தன்
அன்பினோடுபெற்று கந்துசீலைசுற்றியே
அந்தமாய்முனெட்டி தங்கவேகிடத்தி
அஞ்சலேகொடுத்தி றைஞ்சியேவழுத்த
அண்டர்சேனைதிட்டம் என்றுவானமுட்டியே
புங்கமேகனத்த சங்கையாகநித்திய
மந்திரசோபனத்தி றங்கள்கூறமெச்ச
புந்திகூர்மகத்துவ மங்களாகரத்தினே
புடைமண்டியேகுதித் திட்டடாக்கிரமத்துற்
பேய்க்கணத்தைச் சாங்கமும்
விகல்கொண்டுமாவுயித் தக்காத்திரவுக்கிரத்
தாற்றகர்த்திட் டோங்கிய
புகழ்மண்டலாதிபப் பராக்கிரமத்துக்
கோப்பரத்துக் காண்டவனே
கீறல் = எழுதல்
கிறிஸ்து மனுடவதாரக் காட்சி
6. ஆதியதமேவைபுரி பாதகமெலாமகல
ஆரிருளிலே கிருபையாய்
ஆரணியமீதுபல மாடதடைகூடமதில்
ஆயர்தொழ வானவருமே
நீதியொடாகாயமதி னூடதிகவீணையொலி
நேர்புகழ்கள் பாடிவரவே
நேசவறிவாகரர்கள் மூவரொருபாலணுகி
நீடுதிறை யானதிடவே
பேதகவெரோதைகவ டானநினைவால்மொழிகள்
பேசியகொ டூரமறவே
பீடுலகின்மானிடரெ லாமதிகசேமமொடு
பேருலகின் வாழ்வுபெறவே
மாதவதவீதுவளர் யூதர்குலராசகனி
மாதுமரி யாள்மகிழவே
மகவெனுங்கனபிர தாபமுக்கியமாயுயர்
கருணையின் கடல்திரி யேகவஸ்தனாதிதன்
மனுமகன்றிரு மனுவேல் கிறிஸ்துநாயகனே
திறை = அரசிறை
கிறிஸ்து மனுடவதாரப் பிரஸ்தாபம்
7. சுந்தரப்பரமன் மைந்தனற்புதமி
குந்தநிச்சயசு தந்தரக்கருணை
சொந்தம்வைத்தருள வந்துபெத்தலையிலே
துங்கமைக்கண்மரி மங்கைகற்பது
துலங்குகெற்பமதி லங்கியுற்பவம்
தொன்றிடச்சுடர் எழுந்துமுக்கியமதாய்
அந்தரத்தின்மிசை சிந்துநற்கவிக
டந்துவிற்பனமு டன்சொலிப்பணிய
அண்டரக்கணம கிழ்ந்துபற்றிவரவே
அன்புறக்கலையு ணர்ந்தநற்றவர்
உவந்துதெட்சணைசி றந்தளித்தடிகள்
அஞ்சலித்துமிக வுந்துதித்தெழுகவே
தந்திரக்கடிக ணிந்தையுற்றவலு
வஞ்சகக்கொடிய சிந்தையுக்குண்மிகு
சஞ்சலத்துயர்நி றைந்துதட்டழியவே
சங்கைபெற்றதவி தின்குலத்தரசர்
தங்களுக்குமவ ரின்புறத்தில்வரு
சந்ததிக்குமர சென்றுதிட்டமுடனே
மந்திரத்திரவி தங்களுற்றபர
மண்டலச்செபமு ழங்கமெய்ப்புகழ்
வழங்கஅர்ச்செயர் வணங்கஉச்சிதமதாய்
வரமிகும்ஞானச் சாத்திரமொன்றைத்
திறத்திலிட்டகு மாரகுணாகர
குருமனுவேல்சற் பாத்திரதுங்கத்
திரித்துவத்தினி லேகமதாய்வளர்
வளமையின்யூதக் கோத்திரசிங்கக்
கிறிஸ்துரட்சக ரானபராபரனே
ஆரணியம் = காடு; சுரர் = தூதர்;அண்டர் = இடையர்
யேசுபாலகன் எகிப்த்துக்கேகி மீண்டது
8. மனத்திலேமதங்கள் மிகுத்தபாதகன்றன்
அகத்தினானினைந்த துடுக்கெலாம்அறிந்து
மகத்துவமாயெழுந்த திரித்துவஏகதந்தையார்
வரத்திலேநிறைந்த சுரர்க்குளேசிறந்த
ஒருத்தனோடறைந்து விடுத்தகாலைஅந்த
வனத்திலேஅடர்ந்த குடிற்குளேஇருந்ததோர்
கனத்தஞானசிந்தை தரித்தசூசைமுன்பு
வழுத்தவேயவன்றன் மரிப்பெணோடுவந்து
கடுக்கவேகுழந்தை எடுத்துமேநடந்துசீர்
கதித்தநாடதென்றஎகிப்த்தினூடுசென்று
தரித்தபோதுமுன்பு பரத்திலேறிவந்த
கருத்தர்தூதனின்று மறுத்துமேவியங்கனே
சினத்தெரோதையென்ற பெருத்தபாவிகொண்ட
கவட்டினால்மடிந்த விதத்தையேமொழிந்து
திடத்தினீரிருந்த இடத்தையேயகன்றுமே
சிறப்பிலேயுயர்ந்த பெலத்தயூதர்தங்கி
நடத்தியாளுமுங்க டலத்திலேகுமென்று
தெரித்தவாய்மைகண்டு சணத்திலேவிரைந்துதான்
இனத்துளோர்கள்பெந்து சனத்துளோரை-அண்டி
இருக்கநாடியங்கு வரச்செய்தாகமங்கள்
இசைத்தவாறுகந்த கிறிஸ்துதேவமைந்தனே
ஏவைமக்கள் பாதகமுற்றினு
மேதவிழ்த்தத யாபமனோகர
தேவசற்பிர சாதசமுத்திர
நேசவுத்தம ஞானகுணாகர
ஏகசக்க ராதிபமுக்கிய
யேசுரட்சக ரானபராபரனே
தெரித்தல் = சொல்லல்
புகழ்ச்சி
9. சீருயராதா னேதரனேநர தேவகுணாகரனே
தேசிகனேநிச வாசகனேதிரி யேகபராபரனே
ஆரியனேயறி வாகரனேகிரு பாகரனேதிறனே
ஆரணனேபரி பூரணனேபழு தானதிலாதவனே
வீரியனேசெக சூரியனேதிரு வேதவுதாரணனே
மேலவனேநல னேவலனேகன மேன்மையதானவனே
பாரினிலேமனு வானவனேபரி வானவனேதவனே
பரமண்டலாதிபதி வஸ்தாரதளசேகர
நிறைகொண்டுலாவிய விஸ்தானசருவேசுர
பழுதொன்றிலாத கிறிஸ்தேசுநசராதிபனே
10. நிராதரநி ராமயவ ரோதயப ரீதய
நிதானஒரு ஞானபரனே
நிகாதவ லுபாதகச மூலவினை யாவது
நிவாரணகு ணாகரதரா
தராதரத ராதலத ராபதிச ராசர
தயாபரச ரோருகபதா
சதாநிதமு னாதரவ தேபுரிப ராமரி
சரீரியச ரீரிவடிவே
பராபரப ரேசுரப யோதரசி மாசன
பலோர்பணிவி லாசசமுகா
படாரிடுக டாமடம டாதுறுப சாசுட
படாமுடிஎ டாதநடனா
இராசவிச றேலர்கள்பு ராதனத வீதுகும
ராகுருப ராவெனரசே
ஏகமுதலே சருவகாரண வஸ்தாஞ்சுக
ளேபரவியே நடனமாடிய திஷ்டாந்தர
யேசுநசராதிபதி ஞானகிறிஸ் தேந்திரனே
ஆஞ்சுகள் = சம்மனசுகள் (இலத்தீன் வார்த்தை)
எ-து: நிராதர = ஆதாரமற்ற; நிராமய = நோயின்மை; வரோதய = வரத்தினுதைய; பரீதைய = பரிவான தயவு; நிதான = நேர்மையுடைய; ஒரு ஞானபரனே, ஒருதராய் ஞானமுள்ள பராபரனே; நிகாதவலுபாதக = வஞ்சகமான வலிய பாதகம்; சமூல வினையாவதும் = வேரோடு பற்றிய தீவினையாவதும்; நிவாரண = நீக்கிய; குணாகரதரா = குணம் வசிக்குமலையே; தராதர = மலை; தராதல = பூமி; தராபதி = இராசா; சராசர = நடையுற்றவை நடையற்றவைகட்கும்; தயாபர = தயாபரராயிருக்கிற; சரோருகபதா = தாமரைப்பாதா; சதாநிதமுன் = எப்போதும் உன்; ஆதரவதேபுரி = அடைக்கலத்தைக் கொடு; பராமரி = விசாரி; சரீரி = சரீரமுற்ற; அசரீரி = சரீரமற்ற; வடிவே = உருவே; பராபர = வானம் பூமீயையுடைய; பரேசுர = பரத்துக்கெசமான்னிய; பயோதரசிமாசன = மேகசிமாசன; பலோர்பணி= பலராலும் பணியப்பட்ட; விலாச சமுகா = அகண்ட விலாச கூட்டத்தானே; படாரிடு = துன்பஞ் செய்யப்பட்ட; கடாமடம் = மிருகத்துவமான மூடத்தனம்; அடாது = நெருங்காது; உறுபசசுட = பெரும் பசாசுட; படாமுடி = படம் பொருந்திய தளை; எடாத நடனா = எடாதபடி நடனஞ் செய்கிறவரே.
11. சொலாலுரையினா லறிவினா லுணரொணாவலு
சுதாசிதசதா சிவபிதா
சுவாபிதகுணா திதசினேகித மனாயுத
சொரூபிதவினோ தவுனதா
நிலாவியபரா வெளிவியோம விரிவானது
நெடாசலவுடாதிக இவேயோன்
நிசாகரனுலாவிய கிரேக மெணிலாதது
நிகேதனசரா சரமெலாம்
பலாவிதபலா முகபலா நெறிகளேசெய்து
பலூழிபலனே தருதயா
பராகுருபரா திருநரா வொருதராவென
பராமுகமனா திகுமரா
வலாவுருவலா பிசகிலா விசறலாமகத
லாமரிசலா மிடசலா
வகுத்தருட்டங்கும் வேதமார்க்த்தேற் பாட்டுப்பெட்டியே
நவத்திருச்சங்க நீடுதீர்க்கந்தேட் டீட்டுக்கட்டி
மகத்துவச்சிங்க மானவார்த்தைப்பாட் டாட்டுக்குட்டி
எ-து: சொலாலுரையினாலறிவினால் = வார்த்தையினால்,வியாக்கியானத்தினால், அறிவினால்; உணரொணாவலு = அறியக் கூடாத வலிய; சுதாசித = சுயம்பான ஞானம்; சதாசிவபிதா = முடியாத நன்மையுள்ள பிதா; சுவாபிதா = சுவாப உரிமையுள்ள; குணாதித = அதீன குணமுடைய; சினேகித = சிநேகமாகிய; மனாயுத = மனதின் கருவியான; சொரூபித = பரம வடிவான; வினோத வுனதா = மகத்துவமாய் உயர்ந்தோனே; நிலாவிய = ஒளி செய்யப்பட்ட; பராவெளி = பரமண்டலத்தின் வெளிப்பிரகாரம்; வியோம விரிவானதும் = ஆகாச விரிவும்; நெடாசல = நெடிய பூமி; உடாதிகள்=நட்சத்திர முதலியவைகள்; வெயோன் = சூரியன்; நிசாகர னுலாவிய = சந்திரன் உலாவிய; கிரேகமெணிலாததும் = எண்ணி முடியாத கிரகங்களும்; நிகேதன = வீடுகளும்; சராசரமெலாம் = நடையுள்ளதும் இல்லதுமான சமஸ்தமும்; சரம் = நடையுற்றது; அசரம் = நடையற்றது.
12. விடாதுலக டாதபிரகார மொழியாநெனை
விரோதமிடுதே யலகையோ
விகாதமிக வேசெயுதயோ வுடல்பொலாதது
விசாரநினைவோ கவலையோ
படாமிடிமை யோதுரிதமோ கொடுமையோவரு
பவாசையொரு கோடிதிரளோ
பயோததி கொளாவினைகளோ வெனசெய்வேனிரு
பதாசமையம் ஆதரியையா
கெடாதடிமை மீதுன்விழி பார்கருணைகூரடு
கிலேசமறவே யருகில்வா
கிரிடாதிப கயாதிப நியாதிபதயாதிப
கிருபாநதி சதாபதிசுதா
நடாதிபத வீதுசல மோனடிபராவிய
நமோபிரமமே அபையமே
ஞான தீபத் துங்க சொரூபத்
தாதிபிதா மகிமைப் பிரகாச
ரான வேதத் தங்க முலாசத்
தோதுமகா கிருபைக் கதிநேச
ஞாய நீதத் தெங்கள் சுவாபப்
பாலகனாய் வருமெச் சருவேசுரனே
சதாபதி = நித்தியராஜா; சுதா = சுதனே
பயோததி = சமுத்திரம்; நடாதிப = நடனாதிப
13. கரிசித்த கிருபைக்கு முடிஅற்ற வளவற்ற
கருணைக்க ணுளகத்தனே
கதிவைத்த வதிசித்திர மகிமைத்த ருமநித்திய
கனமிக்க வளர்வஸ்துவே
தெரிசித்த கவடற்ற இடையர்க்க ருள்கொடுத்த
திறமைப்பிர பலசித்தனே
செமெச்சஒ ருசிற்று ருவெடுத் தடவியிற்
சிறியகொட்டில் வரும்அத்தனே
வரிசித்த பரதத்துவ சுயதற்ப ரமகத்துவ
வரசத்துவ ஒருசத்தியனே
வழிகெட்ட அடிமைக்கு னருள்சற்றெ னும்வகுத்து
வளமைப்ப டநடத்துவாய்
பரிசுத்த சொருபத்து நிலைமுக்கிய வடிவொத்த
பழுதற்று யர்திரித்துவனே
பந்தச் சந்த விருத்தம் பாடிய
வேத நாயக வாணனின் மேலுயர்
அன்புச் சிந்தை மிகுத்துஞ் சீர்தரும்
யேசு நாதகி ருபாநதி யாகிய
பண்பிட் டும்பர் வழுத்துந் தேவ
சுதாக ராமனு வேலர சாதிபனே
சித்தன் = சித்தமுள்ளவர்; அடவி = காடு
வரசத்துவம் = ஆசீர்வாதப் பெலம்; சுதாகரா = சுதனே
செபமாலை 23 வரை செய்யுள் 324