முதற் பங்கு
பத்துக் கற்பனைகள்
8 அடி
1. கருத்த ரருளிச் செய்த பத்துக்
கற்ப னைகளில் முந்தி னது
கடவு ளுனது பராபர னாங்
கருத்தர் தாமே நமக்கு முன்பாய்க்
கணீத்து வேறே தேவ ருனக்
குண்டா யிருக்கக் கடவ தன்று
ககனத் தினும் பூத லத்துமுல
கத்தின் கீழ்த்தண் ணீரி னிலுங்
ககனம்=வானம்
காணும் பொருட் கொத்தி ருக்குமொரு
சுரூப மெனும் விக்கி ரகமெனுங்
கண்டித் துனக் காயுண் டாக்க
வேண்டாம் அவை கடனைக் கருதிக்
கைகூப் பியுநீ நமஸ் கரித்துக்
கனிந்து சேவிக் கவும் வேண்டாங்
கட்டா யிரண்டாங் கற்ப னையோ
கருணா லையனுன் பரா பரனாம்
கருணாலயன் = கடவுள்
பெருத்த கருத்தர் திரு நாமம்
வீணில் வழங் கிப்பே சாதே
பிரானார் தமது நாம மதை
வியர்த்த மாகச் சுவிக ரித்துப்
பிதற்று மவரைத் தெண்டி னைத்தான்
செய்யா துகுகார் பினை மூன்றிற்
பெருநா ளெனுஞ் சாபது நாளைப்
பிரியத் துடன்றூ யதாக் கநினை
பிரான் = கடவுள்; வியர்த்தம் = வீண்; உகுதல் = விடுதல்;
உகுகார் = விடார்
பிறங்கு நாலாங் கற்ப னைநீ
பெலத்து நன்றாய் இருப்ப தற்கும்
பெறுமுன் னாட்கள் பூமி யினிற்
பெருகி நீடித் திருப்ப தற்கும்
பிதாவை யுன துமா தாவைப்
பேணிக் கனஞ் செய்வா யாகப்
பிசகா வைந்தாங் கற்ப னையோ
கொலைசெய் யாதே பேத கத்தால்
பிறங்குதல் = பிரகாசித்தல்
விருத்தி யாறாங் கற்ப னைதான்
விப சாரம் பண்ணா யாக
மீண்டு மேழாங் கற்ப னையோ
மிகையாற் கள வுசெய் யாதே
விதித்த எட்டாங் கற்ப னையில்
உன்ற னய லான்றன் மீது
விரோ தமா கப்பொய்ச் சாட்சி
விளம்பா யாக ஒன்ப திலோ
மிகை = கேடு; அயலான் = அடுத்தவன்
விரும்பி யாசித் துன தயலான்
வீட் டைஇச் சிக்கா யாக
மிக்க பத்தி லுனக் கடுத்தோன்
மேவு மனை யாள்மெய்ச் சேடன்
வேலைக் காரி யெனு மவன்றன்
விடையை நீச வாக னத்தை
வேறே அயலான் றனக் குளயா
தொன்றை யெனும் வேட்புற வேண்டாம்
விடை = எருது;
நீசவாகனம் = கழுதை; வேட்பு = விருப்பம்
ஒருத்த ரெனு மெய்க்காத் தரிந்தத்
தசகற் பனை களுக் காக
உரைத்த துனது பரா பரனாங்
கருத்தர் நாமுக் கிர வெரிச்சல்
உள்ள தேவ னமைப் பகைப்போ
ருக்கோ பிதாக்க ளவ நெறியை
ஓங்கு மகர்ப்பாற் றலை முறைகள்
ஒருமூன் றொரு நான்கள வாக
தச கற்பனை = பத்துக் கற்பனை; உரைத்தல் = சொல்லல்;
மகர்ப்பால் = பிள்ளைகளிடத்தில்
உறவி சாரித் தடிக் கிறவ
ராக விருக் கின்றோ மானால்
உவந்து நமை நேசித் தெமது
கற்ப னைகளைக் கைக்கொள் ளுவோர்க்
கோரா யிரமாந் தலை முறைமட்
டுருக்கத் தயவு பெருக்க வளிப்
போரா யிருக் கிறோ மென்றான்
ஒப்பி லாத ஒருமு தலே.
உறல் = கிட்டல்
விசுவாசப் பிரமாணம்
4 அடி
2. பரமண் டலமும் பூதலமும்
படைத்த சருவ வல்லபத்தின்
பான்மைப் பிதாவாம் ஏகபரா
பரனை விசுவா சிக்கின்றேன்
பாங்கா யவரின் ஒன்றான
பட்சச் சுதனம் முடநாதர்
பரிவி னேசுக் கிறிஸ்துவையான்
பணிந்து விசுவா சிக்கின்றேன்
(பான்மை=குணம்)
உரைகொண் டிவரோ பரிசுத்தா
வியினாற் கெற்ப மெனஉற்பவித்
துற்ற கன்னி மரியாள்பால்
நின்று பிறந்திவ் வுலகோர்க்காய்
ஓங்கும் பொந்திப் பிலாத்துவின்கீழ்ப்
பாடு பட்டோர் சிலுவைதனில்
உறவே யறையுண்டி றந்தடக்கப்
படடா ருடன்பா தலத்திறங்கி
இருண் மண்டிறந்தோ ரிடத்தினினின்
றேமூன் றாநா ளுயிர்த்தெழுந்தார்
எங்கோன் பரமண் டலங்களிலே
ஏறிச் சருவ வல்லமையின்
எந்தை பரனார் வலப்பாகத்
திருக்கின் றாரங் கிருந்துயிரோ
டிருக்கி றவர்கள் மரித்தவர்கள்
ஏவையு நடுத்தீர்ப் பிடவருவார்
அருள்கொண் டுயரும் பரிசுத்தா
வியையான் விசுவா சிக்கின்றேன்
அரிய பொதுவாந் திருச்சபையும்
அரச் சீட்டவரின் பாகமதும்
அங்கப் பொறுத்தல் மேதையுயிர்த்
தானத் துடனித் தியசீவன்
ஆமுண் டென்று விசுவாசிக்
கின்றேன் ஆள்வா யொருமுதலே
இருண்மண்டிறந்தோர் = இருள் நெருங்கிய மரித்தோர்;
வலபாகம் = வலதுபக்கம்; பாகம் = பங்கு ;அங்கம் = குற்றம்; மேதை = சரீரம்
கர்த்தருடைய ஜெபம்
2 அடி
3. பரமண் டலங்களி லிருக்குமெங்கள்
பிதாஉன் னாமம் அர்ச்சிக்கப்
படவுன் றனின்ராச் சியம்வருகப்
பரத்துன் சித்தஞ் செய்வதுபோல்
தரைமண் டலத்துஞ் செய்யநித்தந்
தரும்எம் அப்பம் இன்றெமக்குந்
தாரு மெங்கள் கடன்காரர்
தமக்கு நாங்கள் பொறுப்பதுபோல்
நிரைகொண் டெமக்கும் பொறுத்துவிடும்
நெடுஞ்சோ தனைக்குட் படப்புரியாய்
நீக்கிக் தீங்கை இரட்சைசெயும்
நிலைராச் சியம்வல் லபமகிமை
உரைகொண் டுமக்கென் றென்றைக்குமே
உண்டா யிருக்கு தாமனென
ஓதச் செபத்தின் முறைமையெமக்
குரைத்தாய் வேதத் தொருமுதலே
அர்ச்சித்தல் = பூசித்தல்
ஞானஸ்நானக் கட்டளை
2 அடி
4. யேசு நாதர் தம்முடைய
சீஷர் களுக்குக் கட்டளையிட்
டிசைத்த திருவாக் கதுநீங்கள்
எழுந்து லோகம் எங்கணும்போய்த்
தேசு பெறச்சா திகளையெல்லாஞ்
சீஷா ராக்கி அவர்களுக்குத்
திவிய பிதாச்சே பரிசுத்தா
வியினா மத்தி லேசிறந்து
பாசமு டன்ஞா னஸ்நானம்
பகுங்கோ விசுவா சமுளனாய்ப்
பரம தீட்சை பெற்றவனீ
டேற்றப் படுவான் பற்றிவிசு
வாசி யாத மானிடனோ
வருமாக் கினைத்தீர்ப் புக்குளராய்
வைக்கப் படுவா னென்றுரைத்தார்
மட்டி லாத ஒருமுதலே
இசைத்தல் = சொல்லல்; தேசு = அழகு; பரமதீட்சை = ஞானஸ் நானம்; பகுத்தல் = கொடுத்தல்
நற்கருணை கட்டளை
3 அடி
5. நமது நாதர் கிறிஸ்தேசு
காட்டிக் கொடுக்கப் பட்டஅன்றை
ராவி லப்பம் எடுத்தருளி
நண்பாய்ப் பிட்டுச் சீடருக்கு
நல்கி யுரைத்த திதைவாங்கிப்
புசியும் உமக்காய் நயந்தளித்த
எமது சரீர மாயிருக்கு
தென்னை நினைக்க இதைப்புரியும்
என்றான் பினையும் அப்படியே
இராப்போ சனஞ்செய் தானபின்னர்
இதைபாத் திரத்தை எடுத்தேத்தி
இஸ்தோத் திரஞ்செய் ததையவர்கட்
கமுத மாகக் கொடுத்துரைத்த
தாவ திதிலே எல்லவரும்
அன்பாய்க் குடியும் இதுபாவப்
பொறுத்த லதற்கென் றுங்கள்பொருட்
டாலே சிந்தப் படும்புதுஏற்
பாட்டி னுடைய எனதிரத்தஞ்
சமமாய் நீங்கள் இதைக்குடிக்குந்
தகுண மனைத்தும் எனைநினைக்குந்
தகமைக் காகச் செய்யுமெனச்
சாற்றித் திவ்விய நற்கருணை
தாபிற் தெமக்குப் பவப்பொறுத்தல்
தந்தாய் வேதத் தொருமுதலே.
நண்பு = நட்பு; நல்கல் = கொடுத்தல்; நயந்து = சிநேகித்து
பாவ சங்கீர்த்தனம்
4 அடி
6. இரக்க முடைய பராபரனே
ஏழைப் பாவி யாகியநான்
இடுக்க ணடைந்திங் குமக்குமுன்பாய்
வீழ்ந்துன் கிருபை பொறையினையும்
என்பாற் றேட வந்தேன்யான்
இதயம் வாக்கென் நடக்கையினால்
எண்ணற் கரிய பவங்களெல்லாம்
இழைத்தே னென்று மனதுநொந்தேன்
பெருக்கக் கிருபைப் பராபரனே
பேதை யெனைநீ தியின்படியே
பிளந்து நரகத் தழுத்தாமற்
பேணி யெனதி ரட்சகருன்
பிரிய சுதனே சுக்கிறிஸ்து
பிரலா பப்பா டவைகளையும்
பிரிந்த மரணத் தையும்பார்த்துப்
பிழையன் புரிந்த பவங்களெல்லாம்
உருக்கத் தயவாற் பொறுத்தருளி
யுவந்தே யிரட்சித் தெனைப்புரப்பா
யொன்றித் திரும்ப யான்பவத்துக்
குறச்சோ திக்கப் பட்டேனால்
உடந்தை யாயங் கதற்கடியேன்
ஒப்பி மனஞ்சம் மதியாமல்
ஒருவி யதனை அருவருத்தே
யுனக்காம் பிரிய மகவாகத்
திருக்கட் கெதிரே நடப்பதற்குத்
திவிய பரிசுத் தருபிகொண்டு
திடனும் புலனும் பெலனையுமே
தீர்க்க முடன்றந்தெ னையாள்வாய்
தீயனி னிச்சாம் போதுனது
சீவப் பரம ராச்சியத்திற்
சேரு வதற்கா யத்தமெனைச்
செய்வாய் வேதத் தொருமுதலே
இடுக்கண் = இக்கட்டு; இழைத்தல் = செய்தல்;
பிழையன் = குற்றக் காரன்; புரிதல் = செய்தல்; ஒருவல் = நீக்கல்;
மகவு = பிள்ளை; திருக்கட் = திருக்கண்
இஃது தரங்கன்பாடித் தென்மார்க்கு மிசியோனாரிமார்
ஞானோபதேசக் குறிப்பிடத்தின்படி பாடினது.
ஜெபமாலை 19 வரை செய்யுள் 223