சந்தவிருத்தம்
1. திங்களுடு செஞ்சுடரி லங்குபுவி யங்கெனது
சிந்தையில டர்ந்தவினை கண்
மங்கும்வழி யெங்குமிலை என்றறிவு ணர்ந்துகழல்
வந்தனடி யன்பிறவி நோ
யுங்கவலை யுந்துரித முஞ்சிறுமை யுங்குறைக
ளும்பிணிக ளுந்தவிர வே
தங்குதய வுங்கிருபை யும்புரிப ரம்பரச
யும்புமனு வின்புதல்வ னே
பிறவிநோய் = சென்மப் பாவம்
2. மனக்கண்மிகு ருக்கமும்இ ரக்கமும்வ ளர்த்தியு
மயக்கியுமி ணக்கிநகை யான்
மினுக்கியபி லிக்கிகண்மு கத்தினைநி னைத்ததி
வினைக்கிட மெனப்படுவ னோ
கனிக்கிதம் வழுத்திய கிருத்திம முரைப்படி
கடுக்கனிபொ சித்தகடை யோர்
தனக்கிணை யெனப்பிணை சொலத்திவிய பரப்பொரு
டரப்படுதி ருப்புதல்வ னே
கிருத்திமம் = பிசாசு
3. அந்திபக லுஞ்சமரி டுங்கொடிய வஞ்சகர
கந்தைகளி டும்புகளி னால்
நிந்தனைஅ டைந்துசெப முஞ்செயம றந்துநிரை
யந்தனில்வி ழுந்துலைவ னோ
தொந்தலகை யின்சிரம்அ ழிந்திடம டந்தைமரி
சுந்தரனென வந்தமுதல் வா
சந்ததமு னைந்துசர ணங்கொடு பரம்பர
சயம்புமனு வின்புதல்வ னே
ஐந்து சரணம் = ஐந்து காய அடைக்கலம்
4. அடக்கமும் ஒடுக்கமும் அகற்றிய துடுக்கரை
அடுத்தவர் மனத்தினிசை வாய்
நடக்கினு மிடக்கொடு கடுத்துரை திடிக்கிட
நவிற்றுவர் பகைக்கெளையு மாள்
இடக்கையி லிருப்பவர் கணக்கினை யெடுத்தழ
லெரிக்கிட விசைக்குநடு வா
சடக்கலி கெடப்புரி மகத்துவ பரப்பொரு
டரப்படு திருப்புதல்வ னே
நவிற்றல் = சொல்லுதல்
5. கஞ்சமிகு நெஞ்சதின முங்கறுவி வங்கையொடு
கங்குல்பக லுந்துயில்கொ ளா
நஞ்சினுமி குந்தநர கங்கியென நின்றுநளி
னங்கொணகை தந்துகன கோள்
அஞ்சிடவ றைந்ததில்அ திர்ந்திருத யம்பதறி
ஐந்துகுறி யங்கடைய வே
தஞ்சமென வந்தனெனை அஞ்சல்செய்ப ரம்பரசு
யம்புமனு வின்புதல்வ னே
நரகங்கி = நரக நெருப்பு
6. எதிர்த்ததி மதத்தொடு சதிப்புக லிடப்பகை
யிளைத்தடர் கவுத்துகம தால்
வெதிர்த்தெனை யதட்டிய வெறிச்சமர் வலித்திறம்
விளைத்திட மிகைப்படுவ னோ
உதிர்த்திடு மிரத்தமு லகத்திடர் தவிர்த்திருள்
ஒளித்திட உயிர்த்தபர னே
சதிர்ப்புடை கதிப்படு மகத்துவ பரபொரு
டரப்படு திருப்புதல்வ னே
கவுத்துகம் = வஞ்சகம்
7. அம்பரம கண்டபுவ னங்கள்பல னந்தமிடை
அன்புடனி றைந்தவரு ளே
உம்பர்தொழு நன்சுடர்வி ளங்குமிரு செஞ்சரணு
வந்துகதி யென்றுமிக வே
நம்புமெனை வம்புடனெ ருங்குகன துன்பமற
நன்றிடுக டந்தபொரு ளே
சம்பரமி கும்பரச கம்பரப ரம்பரச
யம்புமனு வின்புதல்வ னே
8. இலக்கண விலக்கிய மெடுத்தசை யிசைத்தரு
ளினக்கவி தனக்குமரு ளா
தலைக்கழி விடப்புலை பிதற்றிய பணப்பிரி
யருக்கெனை விலக்கியருள் வாய்
மலைக்கொடு முடிப்புற மறைப்படி திருப்புகல்
வழுத்திய திரித்துவபர னே
தலைக்குரு வெனத்தயை மகத்துவ பரப்பொரு
டரப்படு திருப்புதல்வ னே
9. வண்டுமய லும்புவன முஞ்சடமு மொன்றுபட
வந்தமர்பு ரிந்துநய மே
கண்டுகன லின்கணைகள் கொண்டெரிய வெம்பியுயர்
கஞ்சமலர் வந்தடைய னோ
கொண்டைதிகழ் மங்கையரி ரண்டுவிழி வெங்கணைகள்
கொஞ்சமல வென்றுமறி வாய்
சண்டமிவை யென்றுதொலை யுஞ்சொலும் பரம்பரச
யம்புமனு வின்புதல்வ னே
வண்டு மயல் = குற்றமுள்ள பசாசு
10. கொதிப்பொடு மனத்திடம் விடுத்திடர் படத்துயர்
குறித்துனை நினைக்கவரி தாய்
மிதப்படு பவக்கடல் நிலைப்படு மெனைத்தயை
விளக்குற வளர்த்திவிடு வா
யதப்பழு தழித்தத மதக்கிறு தறுத்தறி
வழிச்சிலு கடக்கிவினை யோர்
சதிப்பழி தகர்த்திட மத்துவ பரப்பொரு
டரப்படு திருப்புதல்வ னே
சிலுகு = வீண் தர்க்கம்
11. நீடுசுவி சேடகவி ராயனித மோதிவரு
நேயதிரு மந்திரசெப மே
பாடல்களி னேர்வரிசை யாயெழில தாயுனது
பாதமது கந்துதொழ வே
கேடுகளை யேதடுவி ணாடுகளை யேகொடுகி
லேசமற வந்தெடுப டா
ஈடுகளை யேயிடுவு னாடுகளி னூடெனைவி
டேகமனு வின்புதல்வ னே
2. கா. ஜெபமாலை 5 வரை செய்யுள் 81