ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

6. ஜெபமாலை

செபவண்ணம்

விருத்தம்

தேடும்பணியே திரவியமே
செல்வப்பெருக்கே திருவுளமே
சீனாமலையின் கற்பனையே
செழிக்கும்பரம கானாவே
சிங்காரபூங் காவனமே
செங்கோன்முடியே சீர்பதியே
தேவபரனின் றிருமகனே
தேவாலயமே தினகரனே

நாடும்பரம ராச்சியமே
ஞானநதியே நவநிதியே
நல்லோர்க்கருளே நற்பலனே
நன்மைக்குறவே நாயகமே
நவசேனைகளின் இராசாவே
நரகக்கடியைக் கடிந்தோனே
நாவிலடங்கா மிகும்புகழே
நாயேனுனது மகத்துவத்தைப்

பாடும்படியே கிருபைசெய்வாய்
பாவியெனக்குன் உதவியின்றிப்
பார்மீதோரா தரவுமில்லைப்
பைசாசுலகு மாங்கிஷமும்
பகையென்றுனக்குத் தெரியாதோ
பந்துக்களுந்தா னுனையடைந்த
படியாலுறவற் றதுமறிவாய்
பாழிவ்வினைக்கென் செய்வேனான்

வாடும்படியென் மனதிதனை
வருந்திவருந்தி நினைத்துருகி
மயங்கிக்கண்ணீர் தனையுதிர்த்து
மருகிமருகிப் புலம்புவனோ
வஞ்சக்கலியைத் துரத்தியுன்றன்
மறைவிலடிமை தனைக்காத்து
மகிமைப்படுத்தி அருள்புரிவாய்
மன்னோன்றவிது குலக்கோவே

தனனத்தனதனா தனதானனதத்த
தனதானனதத்த
தனந்தனதன

தனத்தானதான
தனதானதந்த தனதானனா

1. கடல் சுற்றிய தராதலம் வானுலகட்ட
திசை பற்பொருட்கள் யாவது மாறுதினத்தில்
வளமாக வமைத் தெழிலதாக நடத்தி
அகங்கனிவுற அனந்ததிசய மிகுத்தாளனாதி

பொறுமைக் களவிலா மறைசூடிய சத்திய
திரித்துவ பராபரமாகிய நித்திய
எவராலு முரைக்க அரிதான மகத்துவ
வரங்களிலுயர் குணந்தருநய
செபத்தியான ஞானி

கடியைச் சினமதாய் நரகானதில் விட்ட
பெருமைச் சருவகாரணமாதவனுக்கிர
எரிநீதியன் முக்கிய கிருபாசனன் மொய்த்த
பரஞ்செகமது நிறைந்தருளிய
உகப்பான சோதி
கனவேத சுந்தரவரூபியே.

2. கதிர் விட்டொளிர் வியோமமும் வான் விரிவுக்குண்
மிதமற்றடர்து தாரகையானது மற்று
முளபாதலம் வெற்புலகும் வாரியுமச்ச
மிகும்படி நடுநடுங்கிடநட
மடித்தே யுலாவு

மகிமைக்குரிய சீவனகேருபின் முக்கிய
இரதப்பெருமை வாகனமேறி யெதிர்த்த
கனபேய்கள் சிரத்தை மலையாது தகர்த்து
மிகுந்துளதள மடிந்தழிபட
மிதித்தாடு சூரர்

கருணைக் கிணையிலா அருள்வேத சமுத்திர
அறிவுற்பன குணாகர தேசிகர்சித்தர
நவசேனைக ளர்ச்சிய சவைசூழ்கவு மெச்சிய
பயன்களை யுணரசுதந்தரவறி
வுளத்தாதி மூலர்
கலைமாத வந்தருதியாகவான்

3. அடலிட்டெதிர் பிசாசுகளோ டியபட்ட
மணிபொற் சிலுவை ஞானபதாகை படைத்த
துரை மாபரிசுத்த செபமாலை தரித்த
புயன்ற விதிறை யினந்தனிலருள்
ஒளித் தீபமான

பரமச் சொருபராரணர் வீரியசத்துவர்
சுயதற்பர புராதன வாதனதத்துவர்
அசரீரியர் பத்தரகமேவிய நித்தர்
அதம்பழுதற உகந்தவரொரு
தருப்பாவ நாசர்

அகமைக் கொடியபாதக காமிகள் கெட்ட
மனதைப் பணிய ஆவியினேவுதலிட்டு
நிறைமாதவ மிக்ககுணமேவி நிலைக்க
நலந்தரு செபதுரந்தரவதி
சயத்தேவ சீலர்
அனன்மீதறைந்த தசநீதியார்
அக்கினியின் நடுவிற்பத்துக் கற்பனை கொடுத்தவர்

4. அருமைத் தெரிசி மாதவராரியர்பற்றி
எழுதித்தரு முனூல் வழுவாதரசிட்ட
தவிதா ளுயர் பெத்தலையின் மாடடை கொட்டில்
எழுந்தருளிய பரம்பொருளொரு
கிறிஸ்தேசு நாத

உனதக் கிருபையாசனனே கதியற்ற
அடிமைக் கொருதராதரவே துனைவிட்டு
லகமானது கஸ்தி தருபாதல நித்தம்
எழுங்கவலை கண்மனந்தனிலதி
கரித்தே யெநேரம்

அலையிற் றிருகியோடிய ஆலிலையொத்து
மருகித் திரிவனோ பகைகாரானத்த
உறவோரொருபக்கம் அயலாலொருபக்கம்
இடும்புகளுட னடந்தரசுசெய்
தொடுக்காமலாளும்
அதிநேயசம்பனவனாதியே

5. புடவிக் குளனை மாமரியாளுட முற்ற
கிருபைப் பரமனே அடியேன் அளவற்ற
பவகாரிகணிச்சை உலகாசை கடுறகு
ணமும் பகைகவடதும் பெருகிய
மகத்தான தீயன்

மனதிற் பெருமையோ பெரியோரொடு தர்க்க
மிடு சற்பனைகளோ புறர்வீடதுநற்றி
அநியாய மிகுத்த கொலைபாதகமற்ற
அகந்தைகள் கெடு குறும்புகடொகை
கணக்கேதயோ பொய்

புலை சொற்பழுது கோடிகளோகளவுக்கு
ரிய சித்திர வினாவுகளோ நடலத்து
விலைமாதர் கண்மைக்கண் வலையூடுயிர்ச்சிக்கி
விழுந்திடர்படு பெரும்பழுதுள
துடுக்கான கேடன்
எனை நேடவந்த குருநாதனே

6. புதரிற் புலிகள்போன் மளையாளொடு மக்கள்
எதிரிட்ட டமதாவுயிர் சோர்வுபடுத்தி
வினைசேர் கெறுவத்து மதமேறியுரத்து
நிதம்பொருது சமரந்தனையெவ
ரிடத்தே சொல்வேனான்

வெளியிற் பகடியோ பரிகாசவிதத்தி
னொடி சொற்றுவர்களோ வெறியாடிநகைத்து
மதியா தொருலட்சம் அவதூருடன்லட்சை
அழிம்பதுகளை விளம்புதடுள
சனத்தாரினோடு

புகழற் றெளிமையாயுற வாடியலுத்து
மதிகெட்டவனுமாய் முகநாடி கறுத்து
மெலிவாய் மனதுட்கி இருசேவடியுக்குள்
அடைந்தனனெனை மகிழ்ந்தடிமைகொள்
உனக் கோலமோலம்
ஆதுநேரம் என்கலிகடீரவே

7. சடலத்துயரினான் மனவேதனை யுற்று
னது பொஸ்தக மெய்யா மறையாகமசுத்த
சுவிசேட சமுத்திரநெறி ஞானசரித்திர
நலங்கனை யதிசயங்கனைரு
தயத்தே யெணாது

கவனத்துடனலோர் சொனநீதி கடப்பி
அலகைக் கடிமையா யொழியா விரகத்து
மயன்மீறி நச்சுமரமாகியு முட்ட
விடந்தருவிரியனின் பறழரு
வருப்பான பாவி

தவ சொப்பரவு தாழ்மையும் வாய்மையுமற்று
மனமெத்தனவு சாதுசினேகிதசற்கு
ணமு நேசமுமற்று விசுவாசமு மற்று
நடந்தவமதி அடைந்தெரிநர
கதிற்போய் விழாமல்
உனைநாடி நெஞ்சுருக ஞாயமே

8. தவிதுக் குமரனாகவுமே தினியுக்குள்
நரர் பக்கிஷமதாய் அழியாத பதத்தை
யிடவே மனதொத்தரிய பாடுகள் பட்டு
மடிந்துயிருடன் எழுந்தருளியு
னதத் தேறியாதி

வலமைப் பரமனாருடன் வானவர்துத்திய
மெனவர்ச்சனைகளேசெய மேன்மையின் முக்கிய
சரியான தத்துவ வலபாரிசநெட்டி
லிருந்தினி வருகையின் கடையுக
நடுத்தீர்வை யோது

சமையத் தெனை விடாதுனின் வானகரத்தின்
வளமைப் பிரபல சீவனினோர் கிரிடத்தை
முடிமீது தரித்தினிய வாழ்வினிதுலுய்த்து
நயம்பெற வருளியுங் கிருபைசெ
யுனைப் பாடும் ஏழை
உயிர் வாழ்க உம்பருடனூழியே

2. கா. ஜெபமாலை 6 வரை செய்யுள் 89

Table of contents

previous page start next page