1. சீர்தந் துவிண் கதிதந்து நன்
செயல்தந் துபொன் முடிதந்து னின்
பேர்தந் தெனின் கலிவஞ் சகம்
பிணி யும்பல குறையுந் தவிர்
ஏர்தந் திசறே லின் றவி
திறை யன்பொடு நிறைசங் கிதச்
சார்தந் திறைஞ் சியபா தனே
சருவே சுரா சருவே சுரா
2. எனை யுன்றனின் மகவென் றுதான்
இக மும்பர மதுவும் சொலும்
பினை யுங்கடி எதிர்நின்று முன்
பெரு குஞ்சம ரிடநன் றதோ
அனை வந்துமுந் திரியின் ரசம்
அளி யென்றபோ தருள்விண் டவா
தனை யன்றனைத் தயைகொண்டு பார்
சருவே சுரா சருவே சுரா
3. நீயே கதி நீயே மதி
நீயே வழி நீயே விழி
பேயோ டுல கோர்கூ டியும்
பெலனா கவிங் கெனையென் செய்வார்
காயீ னையே கொலைசெய் வன்மேற்
கனமா மெழு பழியென் றவா
தாயாங் கனி மரியாள் தொழுஞ்
சருவே சுரா சருவே சுரா
4. கடிபட்ட பேய் கறுவித் தினம்
கவடத் திடும் வலையுக் குணான்
பிடிபட் டெனின் உயிர்கெட் டிடிற்
பேசார் களோ ஏசார் களோ
முடிபட்ட முண் முடிவைத் துமே
முகமக் கவே திகிரிக் கணுத்
தடிபட் டிட அடிபட் டவா
சருவே சுரா சருவே சுரா
திகிரி = மூங்கில்
5. பகரந் திகழ் மடமங் கையர்
பருவந் தனை நினைவுண் டவர்
மகரந் தனை நிசமென் றியான்
மருளா மலுன் அருள்கூ ரையா
சிகரந் தனில் எழநின் றுசெங்
கதிரின் றிரு உருகொண் டவா
தகரஞ் செறி சரணங் கொடு
சருவே சுரா சருவே சுரா
பகரம் = அலங்காரம்; மகரம் = சாயம்;
சிகரம் = மலையுச்சி; தகரம் = வாசனைப் பொருள்
6. சீலந் தருமறை யின் படி
செல்லா மல்யான் பொல்லா னெனக்
கோலங் கொளில் எவரென் புறங்
குணமென் றுகண் டுறவுஞ் செய்வார்
ஆலஞ் செநி மருடந் திரம்
அழியும் படி மனுவா கியே
தாலந் தனி லேவந் தவா
சருவே சுரா சருவே சுரா
7. விரணங் கொடு பலதுன் பமாய்
வினைமிஞ் சியே விழலன் கெட
மரணந் தொடு பொழுதென் றனின்
மனமஞ் சிடா தபையந் தரா
யிரணஞ் செய வருசங் கரீப்
பிதையம் பொடி படவென் றவா
தருணந் தனில் வுதவும் பரா
சருவே சுரா சருவே சுரா
விரணம் = புண்; இரணம் = போர்
2. இரா.18, 19 அதி.
8. என்தா தைநீ என்தா யநீ
என்சீ வனீ என்தே வனீ
பெந்தான் மனம் நொந்தே துயர்
பெரு காமலுன் அருள்கூ ரையா
சிந்தூ டெழு நன்சீ டர்முன்
றென்பா கவந் தன்பா னவா
சந்தோ டசம் பனரா சனே
சருவே சுரா சருவே சுரா
9. பாபம் படு சாபம் பரன்
கோபங் கொடு பாரங் கியான்
சோபம் படு காதன் பொடு
துணை நின்றெனக் கறிவுஞ் சொலாய்
கூபம் படு நீர்தந் திடக்
குலமங் கைமுன் மொழிகின் றவா
தாபம் படு தோடந் தவிர்
சருவே சுரா சருவே சுரா
கூபம் = கிணறு
10. மாடும் படி பீடுங் கொடு
வாடுந் தமி யேனின் கன
பாடும் பல கேடுந் தவிர்
பாடுந் தமிழ் நாவுங் கொடு
சேடும் பொனின் றேடும் புனை
தேடும் பரி வாளன் பொடு
சாடும் புகழ் நாடும் பரா
சருவே சுரா சருவே சுரா
மாடு = செல்வம்; பீடு = பெருமை; சேடு = அழகு;
தோடு = காதணி; சாடு = சாதுரியம்
11. தினமா யசொற் பனவாழ் வையே
திடமா மென மடமா கிய
கனமா னபா தகன்மீ திலே
கடியால் வரு மிடிநீ ரையா
அனமாள் தரு மரிமைந் தனா
அடிவே தநா யகன்வந் தனா
சனமா னவா இனமா னவா
சருவே சுரா சருவே சுரா
ஜெபமாலை 12 வரை செய்யுள் 133