ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

22. ஜெபமாலை

பரமானுபூதி

காப்பு

பெருமான் கருணைப் பிரானேசு நாதன்
பரமானு பூதி படிக்கக் - கருமாயை
நீக்கி மறுசெனன நீடிப் புதுமனுட
னாக்கும் பரிசுத்த ருபி

அனுபூதி = பிரமாணங்களைக் கொண்டறிந்த அறிவு

1. நீடுங் கிருபா சனநீ தியனை
நாடும் புகழ்பா டிடுநா வருள்வாய்
கூடுஞ் சபையின் குருவா கவுனைத்
தேடும் புலவோர் கள்சினே கிதனே

2. உனையே யொருநா ளுமுளத் துருகி
நினையே னினையும் பெலனீ யருள்வாய்
அனையே பணியும் பரிசுத் தருபி
மனையே மனுவே கரவா கனனே

3. வல்லாண் மையினா லுலகாண் மனனே
எல்லாம் இதமா கவிசைத் தவனீ
பொல்லா னெனவே புறமென் னைவிடல்
நல்லா யுரையாய் நசரா பதியே

ஆதி. 1:31

4. மீனோ மதியோ மினலோ வெளியோ
பானோ பரமோ படியோ பலதோ
ஊனோ வுடலோ வுயிரோ கலவி
மானோ நிலையா னதுவா னவனே

பானு = சூரியன்

5. அடரும் பரமா தரினா சையதுட்
படரும் பழிபட் டழியப் படுமோ
தொடரும் பலசத் துருதுன் றலையை
இடரும் படிவிட் டவிரட் சகனே

பரமாதர் = வேசி

6. கருமா யைகளைந் துலகத் திலுறும்
பெருமா யையடா துபிசா சுகளால்
வருமா யைஅறுத் துமயற் கனிமார்
தருமா யையுநீக் குதயா பரனே

7. சதியா மனமே யுலகைச் சதமாய்
மதியா தையிம்மா னுவேலின் கழலைக்
கதியாய் நினைகா யம்விழா தபடி
துதியாய்த் துதியாய் சுபசோ பனமே

கழல் = கால்

8. மணியா டையுலா சசியோன் மகளின்
பணியா டல்புரிந் தவளும் பணிய
அணியா சையளித் துவிவா கமிடுந்
தணியா வதிநீ ததயா பரனே

9. ஒட்டா ரமடந் தையரோ டுறவாய்
எட்டா மனடந் திவரின் பமெலாம்
விட்டா லும்விடா தவிருப் பமெனோ
கட்டா யுரையாய் கருணா கரனே

10. அமையுஞ் சதுரா யிரவா யனநற்
சமையம் புவிதோன் றினபின் றரையிற்
றமையுஞ் சகலோர் கள்பவந் தவிரச்
சிமயம் பெலிசெய் தசிரோ மணியே

சதுராயிரம் = நாலாயிரம்; ஆயனம் = வருடம்; சிமயம் = மலை

11. தாமாய் மனுவா கியதற் பரனே
சீமான் மனைலா சருசெய் கையெனக்
காமா வலவா அதுசெய் திசுமா
போமா புகலாய் சுரர்பூ பதியே

அது செய்தி = தாமாய் மனிதனான இரகசியம்

12. ஆகா வுனையண் டியுமென் கலிகள்
போகா விதமே துபுகன் றருள்வாய்
ஏகா இனியா யினுமன் புசெயென்
மேகா சனனே வினைமோ சனனே

13. ஒருவன் றனியா யுயரம் பரமன்
றிருவன் புணரார் செயலின் பயனன்
றருவன் றயலன் றகமன் றடியன்
றுருவன் றுடலன் றுறையன் றினனே

14. எம்மா நிலமுந் தொழும்இரட் சகனெம்
இம்மா னுவேலிங் குமிருக் கையிலே
சும்மா விருகா துதுடித் துமனம்
அம்மா பதறிக் கொளலற் புதமே

15. மையார் குழன்மங் கையரின் பணியான்
மெய்யா யுனையா துவிடா மலுனை
ஐயா பணியக் கிருபையா யுதவி
செய்யாய் திரிலோ கசிகா மணியே

லூக். 7:36-50

16. நாமே நமையன் றியனா தியிலென்
றேமேன் மொழிஇட் டவுனைக் கருதி
வேமே மனமிஞ் சும்அவா வதனாற்
பூமேன் முகின்மேல் வருபூ ரணனே

அவா = ஆசைப் பெருக்கம்

17. அதிதூ தர்கடான் அறிவா லறியா
மதிமே வியவா னவனின் புதல்வா
துதிதே வழகா கமுகா நரகா
பதியாள் கணபூ தபயங் கரனே

கண பூத பயங்கரன் = பேய்க்கூட்டம் நடுங்கும் ஆண்டவன்;
நரகாபதி = நரக ராச்சியம்

18. இதியா லிடர்தா வுமுனே தன்வனத்
ததிலா கியநால் வரமென் றருள்வாய்
மதிபா தமடந் தையைஅல் லதுபின்
மதியா விரதா மனுடா திபனே

இதி = பசாசு; நால் வரம் = ஞானம், பரிசுத்தம், பாக்கியம், சாவாமை

19. பாரா சைபடப் படவென் சடலம்
போரா கமுடிந் ததுபோ துமையா
சீரா பலசீ மசனே யிரண
சூரா பரலோ கதுரந் தரனே

இரண சூரன் = யுத்தத்திற் பராக்கிரமன்

20. மறைசூ டியமா தவரின் கழலை
முறைசூ டுமுயற் சியெனக் கருள்வாய்
நிறைசூ டியபத் தர்கணெஞ் சமதிற்
சிறைசூ டியதே வசிமா சனனே

21. பொருதா டுபசா சுகள்போ லெரிய
இருதா ரமெடுப் பவருக் கிணையான்
குருதா தைகுணா சிலுவைத் துவச
விருதா சுவிசே டவிசித் திரனே

சிலுவைத் துவசம் = சிலுவைக் கொடி

22. வேதா பரலோ கவிலா சசபை
நாதா வுனைமெய் யெனநம் பினனான்
சூதா கவடா சொன தத் தனையுங்
கோதா நிசமா சொல்குணா கரனே

23. பெரிதா கியபா தகமும் பிணியும்
எரிதாழ் நரகுங் கெடஏற் றினவா
மரிதான் மணம்வைத் தபதத் தைநித
சரிதான் அளியாய் சருவீ சுரனே

ஏற்றம் = எதிர்த்தல்

24. கலைகெட் டிடவுங் கதறிக் கலியா
னிலைகெட் டிடவு நெறியோ நெறியோ
கொலைகொட் டலகைக் குடிகெட் டதின்வன்
றலைகெட் டிடவந் ததயா நதியே

25. நாளைக் கெனநல் கியஈ கையிடர்
வேளைக் குதவா ததுமெய் யதுபோற்
சூளைக் குலமின் கள்சுகங் களிதென்
றேழைக் குரையா யிசறே லரசே

சூளை = வேசி

26. ஆராய் தலிலா தஅருட் கடலே
பாரா யர்பணிந் துதொழும் பதனே
வாரா யடியே னிடைவந் தென்வினை
தீராய் மனுவா கியதே சிகனே

பாராயர் = உலகத்தின் மேய்ப்பர்

27. பொய்யா னபுனற் குமிளிப் பவுசை
மெய்யா கவிரும் பிவிழப் படுமோ
துய்யா துணையற் றவெனைத் துயரஞ்
செய்யாய் திரியே கபரா பரனே

புனற் குமிளி = நீர்க்குமிளி; பவுசு = ஐசுவரியம்

28. ஏதா யினும்ஈ வையெனக் கருதி
வாதா டிவழுத் தியுநீ மறுசொல்
ஒதா மலிருப் பதுனக் கழகோ
சாதா ரணசத் தியதற் பரனே

29. மண்ணே தருகும் வலியோ பொருளோ
பெண்ணே தரும்ஆ வலதோ பினையோ
கண்ணே மணியே கதியே நிதியே
விண்ணே சொலுமெய்ப் பொருளா னதையே

30. மானார் கலவிக் குண்மடிந் தெனுயிர்
போனா லெனபுண் ணியமெய் துமுனக்
கானா லுமுன்னெஞ் சையறிந் தனையா
ஞானா கரனே நசரைப் பதியே

31. பொல்லா வுலகம் புகுமாக் களிலே
நல்லா ரிலையென் றதுஞா யமலோ
எல்லா ருமிதின் படியோக் கிலெனை
அல்லா தினிநல் லவரார் பரனே

32. நாயா னதுநற் றியவாழ் வினையொத்
தேயா னுமிருந் ததுபோ துமுனின்
மாயா தமெய்வாழ் வருளல் லவெனில்
நீயா யினும்வா ழிதிநித் தியமே

33. கொல்லென் றெழுகூ ளிகளால் வெருவி
வல்லென் றசரண் புகவந் தவெனை
அல்லென் றிடில்அப் புறமென் றுயரார்
சொல்லென் றருள்வார் கள்சுதா கரனே

34. கருவா யெனைஅன் னைகருக் குழியில்
உருவா யுரமே செய்துவந் தவனே
அருவா உருவா அமலா விமலா
பெருவாழ் வருளாய் பெரியோன் மகனே

35. வாதா டியமங் கையர்வஞ் சமனச்
சூதா னதைஎன் றுதொலைத் தருள்வாய்
பாதா ளம்அதிர்ந் துபயந் தலறி
வேதா ளம்வணங் கியவித் தகனே

36. நிறையும் பொறையு நிறமுந் திறமுந்
துறையுஞ் சுகமுங் குலமுந் துணிவும்
பறையும் பலதும் பறிவாம் பரனே
குறையென் றதுரோ கிகுறுக் கிடிலே

37. காவே றியடர் ந்துகெடுத் தகடி
மூவே தனைசெய் துமுடித் ததயா
பாவே பகர்வே னெனையாள் பரனே
கோவே செபமந் திரகுணா நிதியே

காவேறி = (ஏதேன்) தோட்டத்திற் புகுந்து

38. ஆடுங் கலியால் அடிபட் டுலைய
வாடுந் தமியே னைமறந் தனையோ
ஈடுந் திறமற் றஎனக் கெனவும்
பாடும் படலா னபரா பரனே

39. அந்தா தியளித் தவுரைப் படியே
எந்தா தைஎவர்க் கமிரட் சகனீ
வந்தா லெனைமாத் திரமீட் குமுதற்
றந்தா யிலையோ சருவே சுரனே

40. சிங்கா ரவனந் தனிலே செறியு
மங்கா வரநா லும்வகுத் தெனையாள்
புங்கா பரிபூ ரணபூர்த் தியனே
துங்கா நவசங் கதுரந் தரனே

41. ஏகா விசுவா சமுளோ னெவனுஞ்
சாகா னெனவே சொனசற் குருவே
யூகா பரிசே யரோடோ தியவா
நாகா திபஞா னகிருபா கரனே

நாகாதிப = விண்ணாதிப

42. இருளோ டஎழுந் தவிரட் சகனே
மருளோ டுறவிட் டுமயங் குவனோ
தெருளோ டுலகத் திரளோ டுவுமைப்
பொருளோ டருளோ டுபுரிந் தவனே

43. கன்னம் படுகள் ளனெனப் பலராற்
சின்னம் படுகா துதிடத் தயைசெய்
யுன்னம் படுமுன் னையுணர்ந் துதுய
ரின்னம் படலென் செயலே சயனே

உன்னம்படு = மனதிலே வாசமாயிருக்கிற

44. இறைவன் சுதனென் குருவென் பரனென்
றறைவன் றவசின் குணமிங் கருள்வாய்
துறைவஞ் சகருஞ் சகேயுந் தொடருங்
குறைவன் றியஞா னகுணா கரனே

45. வலையே படுவித் தமடத் தவரைக்
கலையே பெறுவித் தகருணா லையனே
நிலையே தவறிக் கெடுநீ தியெனக்
கிலையே யுனைரட் சகனென் றிடிலே

மடத்தவர் = மூடாற்றுமாக்கள்

46. காசா சைக்கொள்கா மிகளைக் கருதி
வேசா ரல்அடைந் ததுமெத் தவயா
நேசா கிருபைவா ருதியே நிதியே
ஈசா வனுபூ திஇயைந் தவனே

அனுபூதி = பிரமாணங்களைக் கொண்டறிந்த அறிவு

47. பொறியைப் பொருநன் புகலுந் திறனும்
நெறியைப் பொருது நிலையுந் தருவாய்
குறியைத் தொழுகுப் பைகளர்ச் சனைசெய்
வெறியைப் பொருதா டியவீ ரியனே

குப்பை = கூட்டம்

48. சதிகைப் படுசத் துருசற் பனையால்
வதிகைப் படுகா துமயங் குவனோ
நிதிகைப் படநீ டுநிரா ணியனே
துதிகைப் படுநித் தியசோ பனனே

வதிகைப் படுகாது = வழிதெரியாமல்; நிராணியன் = பெருமை யில்லாதவர்

49. ஐயா றுறழ்நான் மறைஅர்ச் செயர்கட்
கையா றறிவித் தருள்அற் புதனே
ஐயா றுடனா றுதலைப் பரனே
ஐயா றொருமூ வயதா திபனே

ஐயாறுறழ் நான்மறை அர்ச்சயர்கள் = நான்கை முப்பதிற் பெருக்கிய நூற்றிருபது அப்போஸ்தலருக்கு; ஐயாறறிவித் தருளற் புதனே = பராபானுடைய வழியை அறிவித்த அதிசயமானவனே; ஐயாறுடனாறு தலைப் பரனே = பராபரனுடைய வசனத்தோடே கூட ஆறுதலாயிருக்கிற பராபரனே; ஐயாறொரு மூவயதாதிபனே = முப்பத்து மூன்று வயதுள்ள இராசாவே

50. மாறா தபரா பரன்மைந் தனலால்
வேறா ரைவிரும் பிவினைப் படுவேன்
தூறா கியபா விதுயர்த் தவிராய்
ஆறீர் குலம்ஆ ளிசறே லரசே

ஆறீர் குலம் = பன்னிரண்டு கோத்திரம்

51. சயமுந் தயவுந் தருகும் பரனுன்
பயமுங் கவரும் பகைஞன் பழியுந்
துயருந் தவிருந் துணைநன் பதமுங்
கயமுங் கொடுவந் தருளுங் கதியே

கயம் = மேன்மை

52. வதியாய் நதியாய் வரமா யுரமாய்
விதியாய் நிதியாய் வெளியா யொளியாய்
உதியாய் பதியா யுளமா யுரமாய்
அதியாய் விதிஞா னனுபூ தியுமே

53. நன்றா தையும்நம் பியநாய கனுஞ்
சென்றா ளனையுங் குலதெய் வமுநீ
என்றா பம்அகற் றிஇரங் கியருள்
ஒன்றாம் பொருள்ஞா னுபதே சிகனே

54. சதமே பதினெட் டொடுமுச் சமையத்
திதமே வியஆ னியினேழ் தினமே
பதமே வுநெலைப் பதியான் பரன்மேற்
சிதமே வனுபூ திதெரித் தனனே

கி.பி. 1803-ம் ஆண்டு ஆணி மாதம் 7-ம் தியதி திருநெல்வேலியான் இந்த ஐம்பத்து நான்கு செய்யுளையும் ஒரேநாளையிற் பாடினானென்க.

ஜெபமாலை 22 வரை செய்யுள் 309

Table of contents

previous page start next page