ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

30. ஜெபமாலை

ஆரோக்கியசந்தவெண்பா

1. துங்கமிகுந் தேவபரி
சுத்தசீ யோன்குமரி
மங்கலமணா கிறிஸ்து வள்ளலே - யிங்குன்
செவியடர்ந்து பகருமெங்கள்
செபதவங்க ளுடனிறைந்த
கவியடர்ந்து தயைபுரிந்துகா

2. முன்னோ ருரைத்தபடி
மூவுலகும் ஏற்றவரும்
மன்னாவொரே கிறிஸ்து வள்ளலே - என்நேர
மாயலங்கை யாய்நெருங்கி
வாதிடும்பி சாசைவென்ற
தூயவிந்தநீ தருந்துணை

தூயவிந்தம் = பரிசுத்த தாமரை மலர்ப்பாதம்

3. சிந்தைநொந்து வாடுந்திமிர்
வாதரோகி தனைமைந்த
னென்றோதுங் கிறிஸ்து வள்ளலே – எந்தனை நீ
மிக்ககடி கைக்குவிடு
வித்திருப தத்தில்வல
பக்கமதில் வைக்கஅருள்பார்

4. ஒத்தோதிச் சீடனென
ஓங்குசுங்கத் தின்றலைமை
மத்தேதொழுங் கிறிஸ்து வள்ளலே - சத்துருவாம்
வஞ்சலகை துன்பவலை
வந்துவிழும் என்றன்வினை
கொஞ்சமல நின்கிருபைகூர்

ஒத்து = வேதம்

5. கல்லான் கொடியவலக்
கள்ளனுக்கும் அன்புசெய்த
வல்லான்மகா கிறிஸ்து வள்ளலே - பொல்லாங்கன்
பஞ்சவஞ்ச கங்கள்சஞ்ச
லங்கடுஞ்ச வும்புரிந்த
செஞ்சலங்கள் கொண்டுனன்புசெய்

6. ஆறிரண்டாட் டுப்பெரும்பாட்
டாடவட்கா ரோக்கியஞ்செய்
மாறிரண்டோதாக் கிறிஸ்து வள்ளலே - பேறுகொண்டுன்
வித்தகத் திரித்துவத்தின்
வெற்றிமிக்க பத்திலட்ச
ணத்தையொத்த கத்தழுத்திடாய்

7. நூறாட்டை விட்டொன்றை
நோக்கிச் சுமந்துவந்த
மாறாத்தயை கிறிஸ்து வள்ளலே - வீறாக
வானாம்பர வாஞ்சுகள்சேர்ந்தடி
வாகாம்படி நேர்ந்திடுபாங்கதை
யானாய்ந்திட ஆண்டியாங்கணுமே

8. சிந்தும்புலா னீராற்
றேயமனைத் தும்புரக்க
வந்தசுதா கிறிஸ்து வள்ளலே - சந்ததமுன்
பாதமகத்திற் பதித்துத்துற்
பாவமகற்றித் திருத்திச்சற்
பாதவழிகுட் படுத்திச்சொற்பார்

9. பன்றிக ளைக்கொல்லப்
பசாசைவிட்டுப் பேயனுக்கு
மன்றில்வளஞ்செய் கிறிஸ்து வல்லளே - நன்றறியாக்
கஞ்சமிகும் பஞ்சகன்பங்கங்
கண்டருளைந் தங்கமுங்கொண்டுன்
தஞ்சமுறுஞ் செஞ்சரண்டந்துந்தான்

பஞ்சகன் = பஞ்சபாவி

10. ஒன்பதுபேர் நன்றியற்றோ
ரோவோருத னோவுவந்தோன்
வன்பதென்றோதுங் கிறிஸ்து வள்ளலே - என்பாற்
கருணைபுரிந்துன் கண்கொண்டிங்கென்
கவலையொழிந்துன் துங்கைந்தங்குஞ்
சரணமிரண்டும் பஞ்சம்பங்குந்தா

ஐந்தங்கம் = ஐந்துகாயம்; பஞ்சம்பங்கு=ஐந்துகாயத்தின்பங்கு

11. நெல்லைத் தமிழ்வேத
நாயகன்பா நீடுபுகழ்
வல்லத்திவிய கிறிஸ்து வள்ளலே - அல்லலுறுந்
துன்பமற வந்துனது
சொந்தடிமை யென்றருளி
அன்புபுரி வந்தனமயா

ஜெபமாலை 30 வரை செய்யுள் 435

Table of contents

previous page start next page